Asianet News TamilAsianet News Tamil

க்ருணல் பாண்டியாவால் பெரிய பிரச்னையில் சிக்கிய பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ்..!

க்ருணல் பாண்டியாவால் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளனர்.
 

prithvi shaw and suryakumar yadav will be in trouble after krunal pandya tested corona positive
Author
Colombo, First Published Jul 27, 2021, 5:07 PM IST

இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்து, டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடப்பதாக இருந்தது.

இந்நிலையில், இந்திய அணியின் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் க்ருணல் பாண்டியாவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதன்விளைவாக, இன்று நடக்கவிருந்த 2வது டி20 போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

க்ருணல் பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 8 வீரர்களில், இங்கிலாந்துக்கு செல்லவிருந்த பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவும் அடக்கம்.

prithvi shaw and suryakumar yadav will be in trouble after krunal pandya tested corona positive

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஸ்டாண்ட் பை வீரர் ஆவேஷ் கான் ஆகிய மூவரும் காயத்தால் விலகிய நிலையில், அவர்களுக்கு மாற்று வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லவிருந்தனர்.

அவர்கள் இருவரையும் உள்ளடக்கிய புதிய அணியை நேற்று தான் பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில், க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா உறுதியானதால், அவருடன் தொடர்பில் இருந்த பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால், அதில் பாசிட்டிவ் என்று முடிவு வரும் பட்சத்தில், அவர்கள் இருவரும் இங்கிலாந்துக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios