MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Vaibhav Suryavanshi: வைபவ் சூர்யவன்ஷி பேன்ட்டை கழட்டி கையில் கொடுத்திருப்பான்.. அப்படி என்றால் என்ன? ரவி சாஸ்திரி சொன்ன தகவல்

Vaibhav Suryavanshi: வைபவ் சூர்யவன்ஷி பேன்ட்டை கழட்டி கையில் கொடுத்திருப்பான்.. அப்படி என்றால் என்ன? ரவி சாஸ்திரி சொன்ன தகவல்

அயர்லாந்து தொடரிலேயே 15 வயதான அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆடியிருக்க வேண்டும். அழுத்தம் இல்லாத இளம் வீரரை பெஞ்சில் அமர வைப்பது சரியல்ல என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 02 2026, 07:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
15 வயது அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி
Image Credit : stockPhoto

15 வயது அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி

நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஈர்த்தார். இதனையடுத்து அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் தொடரில் அவரது பெயம் இடம் பெற்றிருந்தது. ஆனால் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் களம் இறக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி சொன்ன கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயர்லாந்து பயணத்தின்போதே வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
0-2 என்ற கணக்கில் தோல்வி
Image Credit : Asianet News

0-2 என்ற கணக்கில் தோல்வி

தேசிய அணியுடன் வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்துக்குச் சென்றதுதான் அவரது முதல் வெளிநாட்டுப் பயணம். முதல் போட்டியிலேயே வைபவின் அதிரடி ஆட்டத்தைக் காண இந்தியா காத்திருந்தது. ஆனால், சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தங்களது T20 அறிமுக போட்டியில் களமிறங்க, வைபவ் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இறுதியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

Related Articles

Related image1
IND vs ENG T20: ஹர்சித் ராணாவுக்காக மூத்த வீரரை அசிங்கப்படுத்திய கவுதம் கம்பீர்? பரபரப்பு தகவல்!
Related image2
Gautam Gambhir: அயர்லாந்திடம் வாங்கிய அடி! கவுதம் கம்பீரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! கடும் விமர்சனம்!
37
ரவி சாஸ்திரியின் கருத்து
Image Credit : Asianet News

ரவி சாஸ்திரியின் கருத்து

சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிகழ்ச்சியில் பேசிய ரவி சாஸ்திரி, வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றார். கூடிய விரைவில் அந்த இளம் வீரருக்கு இந்திய அணி வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அப்போது வைபவின் ஆட்டம் குறித்தும் ரவி சாஸ்திரி தனது கருத்து ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

47
பேண்ட்டை கழற்றி கையில் கொடுத்திருப்பான்
Image Credit : ValenceCricket x

பேண்ட்டை கழற்றி கையில் கொடுத்திருப்பான்

இங்கிலாந்துக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி ஆடுவாரா என்று தொகுப்பாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, 'அவன் அயர்லாந்திலேயே ஆடியிருக்க வேண்டும். அயர்லாந்து மைதானம் சிறியது, பந்துகளை ஸ்டேடியத்திற்கு வெளியே பறக்கவிட்டு இருப்பான். அங்கேயே அவன் பேண்ட்டை கழற்றி கையில் கொடுத்திருப்பான்' என்று கூறினார்.

57
பெஞ்சில் ஏன்?
Image Credit : BCCI

பெஞ்சில் ஏன்?

கூடிய விரைவில் வைபவை இந்திய அணி களமிறக்க வேண்டும் என்று வலியுறுத்திய ரவி சாஸ்திரி, 'ஐபிஎல்-இல் எந்த வேகப்பந்து வீச்சாளரையும் வைபவ் சூர்யவன்ஷி விட்டுவைக்கவில்லை. அவரை ஏன் பெஞ்சில் உட்கார வைத்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை' என்றார். மேலும், வைபவ் சூர்யவன்ஷியை ஏன் ஆடவைக்க வேண்டும் என்றும் சாஸ்திரி விளக்கினார்.

67
ஏன் ஆடவைக்க வேண்டும்?
Image Credit : Getty

ஏன் ஆடவைக்க வேண்டும்?

வைபவ் சூர்யவன்ஷி மீது எந்த அழுத்தமும் இல்லை. 15 வயது மட்டுமே ஆகும் இளம் வீரரான அவருக்கு எந்த பயமும் இல்லை. முதல் 2-3 ஓவர்களில் களமிறங்கினாலும், அணியில் தனக்கான இடத்தைப் பிடித்துவிடுவார். அதற்காகவாவது வைபவ் சூர்யவன்ஷியை ஆடவைக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறினார்.
77
விரைவில் அறிமுகமாகும் வாய்ப்பு
Image Credit : Vaibhav Suryavanshi Instagram

விரைவில் அறிமுகமாகும் வாய்ப்பு

அப்போது தொகுப்பாளர், 'பேண்ட்டை கழற்றி கையில் கொடுப்பது என்றால் என்ன அர்த்தம்?' என்று ரவி சாஸ்திரியிடம் கேட்டார். அதற்கு, 'ஒருவரைத் தோற்கடிப்பது அல்லது அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது' என்று அர்த்தம் என விளக்கினார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விளையாட்டு
வைபவ் சூர்யவன்ஷி

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs ENG T20: ஹர்சித் ராணாவுக்காக மூத்த வீரரை அசிங்கப்படுத்திய கவுதம் கம்பீர்? பரபரப்பு தகவல்!
Recommended image2
IND vs ENG 2nd T20: இனி சான்ஸ் இல்ல! சஞ்சு சாம்சன் நீக்கம்? இளம் புயல் உள்ளே! இந்தியா பிளேயிங் லெவன்!
Recommended image3
IND vs ENG 1st T20: மழை வந்தாலும் சிக்சர் மழையில் அபிஷேக் சர்மா உலக சாதனை! ஷ்ரேயாஸ் ஐயரும் மெகா ரிக்கார்ட்!
Related Stories
Recommended image1
IND vs ENG T20: ஹர்சித் ராணாவுக்காக மூத்த வீரரை அசிங்கப்படுத்திய கவுதம் கம்பீர்? பரபரப்பு தகவல்!
Recommended image2
Gautam Gambhir: அயர்லாந்திடம் வாங்கிய அடி! கவுதம் கம்பீரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! கடும் விமர்சனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved