#RSAvsPAK தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20..! தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. செஞ்சூரியனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி:
முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), பாபர் அசாம்(கேப்டன்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ், ஹைதர் அலி, ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரௌஃப்.
தென்னாப்பிரிக்க அணி:
ஜே.மாலன், மார்க்ரம், ஜார்ஜ் லிண்டே, வாண்டெர்டசன், ஹென்ரிச் க்ளாசன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), வியான் மல்டர், ஃபெலுக்வாயோ, சிசாண்டா மகலா,ஃபார்டியூன், லிசாத் வில்லியம்ஸ், ஷாம்ஸி.