சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளுமே முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இன்று களமிறங்கியுள்ளன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. எனவே சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

சிஎஸ்கே அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மொயின் அலி அணிக்குள் வந்ததால் டெவான் கான்வே நீக்கப்பட்டுள்ளார். ருதுராஜுடன் உத்தப்பா தொடக்க வீரராக களமிறங்குகிறார். ஃபாஸ்ட் பவுலர் ஆடம் மில்னே காயம் காரணமாக ஆடவில்லை. எனவே அவருக்கு பதிலாக ப்ரிட்டோரியஸ் ஆடுகிறார். மிட்செல் சாண்ட்னெருக்கு பதிலாக முகேஷ் சௌத்ரி என்ற வீரர் ஆடுகிறார்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, ட்வைன் பிரிட்டோரியஸ், முகேஷ் சௌத்ரி, துஷார் தேஷ்பாண்டே.

லக்னோ அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மோஹ்சின் கானுக்கு பதிலாக ஆண்ட்ரூ டை சேர்க்கப்பட்டுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி, துஷ்மந்தா சமீரா, ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.