Asianet News TamilAsianet News Tamil

ரோஹித் - கோலி மோதல் குறித்து கபில் தேவ் ஓபன் டாக்

ரோஹித் - கோலி இடையேயான மோதல் குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 

kapil dev speaks about rohit kohli rift
Author
England, First Published Aug 2, 2019, 3:57 PM IST

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது. இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த 4ம் வரிசை பேட்ஸ்மேனை 2 ஆண்டுகளாக தேடியும் இந்திய அணி நிர்வாகத்தால் சரியான வீரரை கண்டறிய முடியவில்லை. 

அதன் எதிரொலியாக உலக கோப்பையில் தோற்று இந்திய ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. உலக கோப்பைக்கு பின்னர் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. இந்திய அணி, ரோஹித் மற்றும் கோலி தலைமையில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதாகவும், துணை கேப்டன் என்ற வகையில் ரோஹித்தின் ஆலோசனையை கேட்காமலேயே கேப்டன் கோலி தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் தகவல் வெளிவந்தது. மேலும் அணி தேர்விலும் அது எதிரொலித்ததாகவும் ஒரு தகவல் வந்தது.

kapil dev speaks about rohit kohli rift

மேலும் உலக கோப்பை சமயத்தில் 15 நாட்கள் மட்டுமே குடும்பத்தினரை தங்களுடன் தங்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்திருந்தது. ஆனால் கேப்டன் கோலியின் அனுமதியின்றி ரோஹித் சர்மா தொடர் முழுவதும் மனைவி ரித்திகாவை தங்கவைத்திருந்ததாகவும் இதுதொடர்பாக ரோஹித்திடம் கோலி கேட்கப்போய்த்தான் பிரச்னை வந்ததாகவும் ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் அதற்கு முன்பிலிருந்தே ரோஹித் - கோலி பனிப்போர் குறித்து பேசப்பட்டுவருகிறது. எனவே இதுதான் இருவரின் மோதலுக்கு காரணம் என்று கூறமுடியாது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கிளம்புவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலியிடம், ரோஹித்துடனான மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ரோஹித்துடன் எந்த மோதலும் கிடையாது என திட்டவட்டமாக மறுத்தார். 

kapil dev speaks about rohit kohli rift

அதேபோல ரோஹித்துக்கும் கோலிக்கும் இடையே மோதல் என்று பேசுவதெல்லாம் தவறு. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று கம்பீர், அக்தர் ஆகியோர் கூட கருத்து தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், ரோஹித் - கோலி மோதல் குறித்து பேசிய முன்னாள் கேப்டன் கபில் தேவ், களத்துக்கு வெளியே கருத்து முரண் இருக்கலாம். இருவரது அணுகுமுறையும் வேறுபடலாம். ஆனால் அணிக்காக ஆடும்போது களத்தில் இறங்கிவிட்டால், வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமே ஒட்டுமொத்த சிந்தனையாக இருக்க வேண்டும். கருத்து முரண் என்பது ஒருவரையொருவர் காலைவாரி விடுவதல்ல. அவரவர் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios