IPL 2022 Retention: ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களின் முழு விவரம்..!
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்களின் விவரங்களை பார்ப்போம்.
ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். அந்தவகையில், இன்றுதான் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டது.
ஐபிஎல் அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் விவரத்தை பார்ப்போம்.
மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு.
ஆர்சிபி - விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ்.
ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
பஞ்சாப் கிங்ஸ் - மயன்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கேன் வில்லியம்சன், அப்துல் சமாத், உம்ரான் மாலிக்
சிஎஸ்கே - தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி
கேகேஆர் - சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்
டெல்லி கேபிடள்ஸ் - ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, அன்ரிக் நோர்க்யா, அக்ஸர் படேல்.