Asianet News TamilAsianet News Tamil

#IPL2022 புதிய 2 அணிகளுக்கு 6 நகரங்களை ஷார்ட் லிஸ்ட் செய்த பிசிசிஐ..!

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக 2 அணிகளை சேர்ப்பதற்கு பிசிசிஐ தீர்மானித்துள்ள நிலையில், அந்த 2 புதிய அணிகளுக்கு 6 நகரங்களை ஷார்ட் லிஸ்ட் செய்துள்ளது பிசிசிஐ.
 

bcci short lists 6 cities for 2 new franchises for ipl 2022
Author
Chennai, First Published Sep 6, 2021, 10:24 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எஞ்சிய போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன.

அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இதுவரை 8 அணிகள் ஐபிஎல்லில் ஆடிவரும் நிலையில், அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

அடுத்த சீசனில் 2 புதிய அணிகளை சேர்ப்பது ஏற்கனவே உறுதியாகியிருந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ. அதன்படி, புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5 வரை பெற்றுக்கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்தது.

அந்த 2 அணிகள் எந்தெந்த நகரங்களை மையப்படுத்தியதாக இருக்கும் என்ற கருத்துகள் உலா வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், 6 நகரங்களை ஷார்ட் லிஸ்ட் செய்துள்ளது பிசிசிஐ.

அதன்படி, கிழக்கு மண்டலத்திலிருந்து கவுஹாத்தி, ராஞ்சி, கட்டாக், மேற்கிலிருந்து அகமதாபாத், மத்திய மண்டலத்திலிருந்து லக்னோ மற்றும் வடக்கிலிருந்து தர்மசாலா ஆகிய 6 நகரங்களை ஷார்ட் லிஸ்ட் செய்துள்ளது பிசிசிஐ. இந்த 6 நகரங்களில் இரண்டை மையப்படுத்தியதாக இருக்கும் புதிய அணிகள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios