Asianet News TamilAsianet News Tamil

#IPL2022 ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும்..? ஆகாஷ் சோப்ரா அதிரடி

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்துக்கு முன் ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

aakash  chopra opines which 4 players might be retained by rcb before ipl 2022 mega auction
Author
Chennai, First Published Jul 12, 2021, 3:37 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் 29 லீக் போட்டிகள் நடந்துள்ள நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர்  19 முதல் அக்டோபர் 15 வரை நடக்கவுள்ளது. ஐபிஎல் 15வது சீசனில் கூடுதலாக புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

மெகா ஏலம் நடக்கவிருப்பதால், அனைத்து அணிகளும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற அனைத்து வீரர்களையும் கழட்டிவிட வேண்டும். 

அந்தவகையில், இதுவரை ஒரு சீசனில் கூட ஐபிஎல் டைட்டிலை வென்றிராத ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

விராட் கோலி, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய 3 இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர் டிவில்லியர்ஸ் ஆகிய நால்வரை ஆர்சிபி தக்கவைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

தேவ்தத் படிக்கல் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டதால், அவரை தக்கவைத்துக்கொள்வது ஆர்சிபிக்கு நல்லது. 

ஆர்டிஎம்(Right To Match)-ஐ ஜேமிசன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவருக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சோப்ரா தெரிவித்துள்ளார். ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் ஜேமிசனை ரூ.15 கோடிக்கும், மேக்ஸ்வெல்லை ரூ.14 கோடிக்கும் ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios