Asianet News TamilAsianet News Tamil

#IPL2021 சிஎஸ்கே அணியில் 3 பேருக்கு கொரோனா..! ஐபிஎல்லுக்கு ஆப்பு..?

கேகேஆர் அணி வீரர்கள் இருவரை தொடர்ந்து, சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
 

3 non playing csk members tested corona positive mid ipl 2021 season
Author
Chennai, First Published May 3, 2021, 4:46 PM IST

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் இதுவரை ஐபிஎல் 14வது சீசன் வெற்றிகரமாக எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்துவந்த நிலையில், தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்று ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கவிருந்த நிலையில், கேகேஆர் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கேகேஆர் அணியில் ஆடும் தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து இன்று நடக்கவிருந்த ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது. 

3 non playing csk members tested corona positive mid ipl 2021 season

இந்நிலையில், சிஎஸ்கே அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் லக்‌ஷ்மிபதி பாலாஜி மற்றும் பஸ் க்ளீனர் ஆகிய மூவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

கேகேஆர் அணி வீரர்களை தொடர்ந்து, சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது ஐபிஎல் தொடர்ந்து நடத்துவதை சிக்கலாக்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவே, ஐபிஎல் மட்டும்தான் சில மணி நேர மகிழ்ச்சியை இந்தியர்களுக்கு அளித்துவந்த நிலையில், இப்போது அதற்கும் ஆப்படிக்கும் விதமாக கொரோனா ஐபிஎல்லையும் அச்சுறுத்துகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios