Asianet News TamilAsianet News Tamil

திருவண்ணாமலை பரணி தீபம், மகா தீபம்.. ஆன்லைனில் அனுமதி சீட்டு பெறுவது எப்படி? எப்போது விற்பனை தொடக்கம்?

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் கார்த்திளை தீபத்திருவிழா நவம்பர் 26ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. 

Tiruvannamalai Bharani Deepam, Maha Deepam.. How to get admit card online? tvk
Author
First Published Nov 23, 2023, 11:55 AM IST

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான பரணி தீபம் மற்றும் மகா தீபம் காண அனுமதி சீட்டுகளை பெறுவதற்கான நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் கார்த்திளை தீபத்திருவிழா நவம்பர் 26ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. பரணி தீபம் தரிசனம் காண ரூ.500/- கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், அன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் தரிசனம் காண ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகளும், ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகளும் என மொத்தம் 1,600 அனுமதி சீட்டுகள் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.  

இதையும் படிங்க;- "பரணி தீபம்‌" ஏன்.. எப்போது.? அதன் பலன்கள் மற்றும் முறை இதோ!

Tiruvannamalai Bharani Deepam, Maha Deepam.. How to get admit card online? tvk

ஆன்லைனில் அனுமதி சீட்டு பெறுவது எப்படி?

* அனுமதி சீட்டுக்களை https://Annamalaiyar.hrce.tn.gov.in என்ற அருணாசலேசுவரர் திருக்கோயில் இணையதள வழியாக பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 24ம் தேதியன்று காலை 10 மணிக்கு விற்பனை தொடங்குகிறது. 

* கட்டண அனுமதிச் சீட்டுகளைப் பெற விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்..

*  ஒரு ஆதாா் அட்டைக்கு ஒரு கட்டண அனுமதிச் சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். 

*  கட்டண அனுமதிச் சீட்டு பதிவு செய்தவுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓ.டி.பி.) குறுஞ்செய்தி பதிவு செய்தவரின் கைபேசி எண்ணுக்கு வரும்.

*  கட்டண அனுமதிச் சீட்டு பதிவுக்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*  ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து பரணி தீப தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் நவம்பா் 26-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

*  மகா தீப தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் நவம்பா் 26-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

*  பரணி தீபம், மகா தீப நிகழ்வுகளை காண வரும் பக்தா்கள் அசல் கட்டண அனுமதிச் சீட்டு மற்றும் ஆதாா் அடையாள அட்டை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்துக்கு கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் (திட்டி வாயில்) வழியே வர வேண்டும்.

*  குறிப்பிட்ட நேரத்துக்குள் வராத பக்தா்கள் கண்டிப்பாக கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டாா்கள்.

இதையும் படிங்க;-  Tiruvannamalai Deepam: கார்த்திகை தீபத் திருவிழா.. மலை ஏறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Follow Us:
Download App:
  • android
  • ios