Asianet News TamilAsianet News Tamil

உங்கள் வாழ்க்கையில் நன்மை கிடைக்குமா? கால பைரவரை இந்த மந்திரங்கள் சொல்லி வழிபடுங்க....!!

உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்க கால பைரவரை சில மந்திரங்கள் சொல்லி வழிபட்டு வந்தால் உங்கள் கஷ்டம் நீங்கி நல்ல பலனை அடைவீர்கள். அது என்னென்ன மந்திரங்கள் அவற்றை எவ்வாறு வழிபடும் வேண்டும் என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்..

kala bhairava mantra benefits
Author
First Published Jun 2, 2023, 9:02 PM IST

இந்து மதத்தில் மிக முக்கியமான  கடவுள் சிவபெருமான்தான். அழிக்கும் கடவுளின் போது சிவபெருமான் ருத்ர அவதாரமாக இருக்கிறார். சிவனின் இந்த அவதாரம், கால பைரவர்தான். மிகவும் முக்கியமான கடவுள் காலபைரவர் தான். இவர் அதிக அருளும் அருள் புரியும் கடவுளும் ஆவார். இதனால்தான் முனிவர்களும் யோகிகளும் காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர்.

"கால" என்பதன் பொருள் கட்டுப்படுத்துபவர். காலபைரவர் உருவம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கும். ஆனால் இவர் பக்தர்களிடம் மிகுந்த இரக்க குணம் உள்ளவர். எனவே இவரை வழிபட்டு நீங்கள் வந்தால் பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். கால பைரவர் பல வடிவங்களில் இருப்பார். அந்த ஒவ்வொரு வடிவ வழிபாடும் உங்களுக்கு ஒவ்வொரு விதமான நன்மைகளை வழங்கும். இப்போது
கால பைரவ மந்திரத்தின் அர்த்தங்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

சிதாங்க பைரவா:

இந்த பைரவர் தங்க நிறத்தில் இருப்பார். கையில் நான்கு வகையான ஆயுதங்களுடன் அன்ன பறவையின் மீது அமர்ந்திருப்பார்.

வழிபடும் மந்திரம்:

" ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரம் ஜாம் கிளாம் க்ளீம் க்ளம் பிராமி தேவி சமேத்ய அசிதாங்க பைரவாய சர்வ ஷாப் நிவர்த்திதாய ஓம் ஹ்ரீம் பட் ஸ்வாஹா"

அர்த்தம்:
தாய் பிராமி தேவியுடன் தோன்றி அனைத்து சாபங்களையும் நீக்கும் அசிதாங்க பைரவாவை நான் வணங்குகிறேன் என்பது இதன் அர்த்தம். இது உங்களின் படைப்பாற்றலை அதிகரிக்க செய்யும். குறிப்பாக, அனைத்து துறையிலும் உங்களை வெற்றி பெற செய்யும்.

ருரு பைரவா:
மாணிக்கங்களால் அலங்கரிக்கப்பட்ட இவர் வெள்ளை நிறத்தில் காட்சியளிப்பார். இவரது கையில் அக்ஸமாலை, அங்குசம், புத்தகம் மற்றும் வீணை ஆகியவை இருக்கும். இவர் காளை மீது சவாரி செய்வார்.

வழிபடும் மந்திரம்:

 " ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஷ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஸ்ரீம் சர்வ ராஜ வசீகராய சர்வ ஜனா மோகனாயா சர்வ வஸ்யா ஷீக்ராம் ஷீக்ராம் ஸ்ரீம் க்ளீம் ஸ்ரீம் ஸ்வாஹா "

அர்த்தம்:
அனைவரையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக்கூடிய ருரு பைரவாவுக்கு நான் வணங்குகிறேன். வாழ்க்கையின் தடைகளை வெல்ல என்னை ஆசீர்வதிப்பீராக. இவரை நீங்கள் வழிபட்டு வந்தால் உங்கள் எதிரிகளை அழித்து அனைவரையும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம்

சந்தா பைரவா:

இவர் நீல நிறத்தில் இனிமையான முகத்துடன் மயிலின் மீது சவாரி செய்வார்.

வழிபடும் மந்திரம்:

" ஓம் ஹரீம் சர்வ சக்தி சக்தி ரூபய நீலா வர்ணயா மகா சந்தா பைரவய நமஹா "
அர்த்தம்:

பொருள் மற்றும் பலன்கள் நீல நிறத்திலும், அனைத்து சக்திகளின் களஞ்சியமாகவும் இருக்கும் சந்தா பைரவாவுக்கு நான் தலைவணங்குகிறேன். இவரை வழிபட்டு வந்தால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் எதிரிகளை வெல்லும் வலிமை உங்களுக்கு கிடைக்கும்

இதையும் படிங்க: கும்பாபிஷேகத்தின் போது திடீரென மாயமான சாய்பாபா சிலை - பரவசத்தில் பக்தர்கள்

குரோத பைரவா: 
இவர் சாம்பல் நிறத்தில் இருப்பார். நீண்ட வாள் மற்றும் கோடரியுடன் தோன்றிய இவர் கழுகின் மீது சவாரி செய்வார்.

வழிபடும் மந்திரம்:

 " ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் க்ளீம் சர்வ விக்னா நிவாரணயா மகா க்ரோதா பைரவய நமஹா "

அர்த்தம்:
எல்லா தடைகளையும் நீக்கும் மகா க்ரோதா பைரவுக்கு நான் வணங்குகிறேன். இவ்வாறு வழிபடும்போது உங்களுக்கு சாத்தியமான குறிப்பாக முக்கியமான முடிவுகளை எடுக்கும் சக்தி உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும்.

உமைந்த பைரவா:

வெள்ளை நிறத்தில் தோன்றிய இவர் கையில் ஆயுதங்களுடன் குதிரையின் மீது சவாரி செய்வார்

வழிபடும் மந்திரம்:

 " ஓம் ஹ்ரீம் வராஹி சமேதயா மகா உன்மத்தா பைரவய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா "

அர்த்தம்:
தாய் வராஹியுடன் தோன்றும் உன்மத்தா பைரவாவுக்கு நான் தலைவணங்குகிறேன். மேலும் 
அவர் என்னை ஒரு சக்திவாய்ந்த பேச்சால் ஆசீர்வதிப்பாராக. இவ்வாறு இவரை வழிபட்டு வந்தால் உங்களது பேச்சு மீது கட்டுப்பாட்டை பெறுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் பேச்சை மற்றவர்களுக்கு கேட்டு நடக்கும் சக்தியை பெறுவீர்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios