சென்னை இஸ்கான் கீதா மகாத்ம்யம் இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பு, வரும் 7 நாட்களில் நடைபெறும்.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சென்னை கீதா மஹாத்ம்யம் இலவச ஆன்லைன் சான்றிதழ் பாடத்தை நடத்துகிறது. இந்த வகுப்புகள் 22 ஏப்ரல் 2024 அன்று தொடங்கி 28 ஏப்ரல் 2024 அன்று முடிவடைகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த கீதா மஹாத்ம்யம் இலவச ஆன்லைன் வகுப்பானது வேறும் 7 நாட்கள் மட்டுமே நடத்த உள்ளதாக இஸ்கான் சென்னை கோயில் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இஸ்கான் கோயிலில் வெகு விமரிசையாக நடந்து முடிந்த 'கௌரா பூர்ணிமா'

தினமும் ஒரு மணி நேரம் நடக்கும் இந்த வகுப்பு ஆனது இரவு 8 மணிக்கு தொடங்கி 9 மணிக்கு நிறைவடையும். மேலும் இந்த வகுப்பு ஆங்கிலம் மற்றும் தமிழில் எளிதான பாடநெறி கற்பிக்கப்படும். ஸ்ரீமத் பகவத் கீதையைப் படிப்பதன் மகிமைகள் மற்றும் நன்மைகளைப் பற்றி இது பேசுகிறது.

இதையும் படிங்க: கிருஷ்ண பக்தர்களுக்கு குட் நியூஸ்! 25 மார்ச் அன்று கௌர பூர்ணிமா விழா... கிருஷ்ணர் அருளைப் பெற்று மகிழுங்கள்!

படிப்பை முடித்த பிறகு பங்கேற்பாளர்களுக்கு முடிந்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 73585 11132 என்ற வாட்ஸ்அப் எண்ணை அழைக்கவும். மேலும், https://www.iskconchennai.com எனும் இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D