Asianet News TamilAsianet News Tamil

கேட்டதை கொடுக்கும் மூன்றாம் பிறை தரிசனம் !இன்று மாலை சந்திர தரிசனம் செய்தால் இத்தனை பலன்களா?

அம்மாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள் சந்திரனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா? பலரும் அறிந்திராத சூஷ்ம விஷயங்கள் என்ன? சந்திர பிறையை சேவிக்கும் பொழுது சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரமும் , மூலமந்திரமும் சொல்ல வேண்டும்? என்பதனை இன்றைய பதிவில் பார்க்க உள்ளோம்.

Benefits of  3rd-crescent-day-Moon-worship
Author
First Published Mar 23, 2023, 4:26 PM IST

இன்று மூன்றாம் பிறை. மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவங்களை போக்கும் என்பார்கள். சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சேர்வது அம்மாவாசை திதி . ஒவ்வொரு அம்மாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாளை மூன்றாம் பிறை என்கிறோம்.

அம்மாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள் சந்திரனை வழிபட்டால் என்னென்ன பலன்கள்கிடைக்கும் தெரியுமா? பலரும் அறிந்திராத சூஷ்ம விஷயங்கள் என்ன? சந்திர பிறையை சேவிக்கும் பொழுது சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரமும் , மூலமந்திரமும் சொல்ல வேண்டும்? என்பதனை இன்றைய பதிவில் பார்க்க உள்ளோம்.

மூன்றாம் நாளில் தெரிகின்ற சந்திரன் அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். இந்த மூன்றாம் பிறை மாலை 6.30 மணியளவில் தெரியும் பிறை . சந்திரனை தரிசிக்கும் வேளையில் கையில் காசை வைத்து மூடிக் கொண்டு வளமாக 3 முறி சுற்றி விட்டு பிறையை தரிசித்து வணங்க பெண்களுக்கு மாங்கல்யம் பாக்கியம் ஏற்படுகிறது. தவிர ஞாயபக சக்தி அதிகரிக்கும் ,மனக்குழப்பம் நீங்கும், கண் பார்வை தெளிவாகும், ஆயுளை பெருக்கும் .செல்வங்களை சேர்க்கும். பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும்.

பிறையை பார்த்து வணங்குவது சிவபுண்ணியமாகும். பிறை சிவபெருமானின் திருமுடியில் இருப்பதல்லவா! பிறையை தரிசனம் செய்தல் அந்த சிவபெருமானை தரிசனம் செய்வதற்கு சமம் , பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம்.

எதிரிகளின் பார்வையில் இருந்து தப்பித்து,அவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் இருக்க இந்த பரிகாரத்தை பண்ணுங்க!

இன்று முதல் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வோம்.
3 பிறையை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கன் கூட தெளிவு பெறுவான்.
4 பிறை தொடர்ந்து தரிசித்தால் நம் வினை நாசமாகும்.
5 பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசனாவான்.
6 பிறையை தொடர்ந்து தரிசனம் செய்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.
7 பிறையை தொடர்ந்து தரிசனம் செய்தால் தீராத கடன் தீரும்.
10 பிறை தரிசனம் செய்தால் பாரில் புகழ் ஓங்கும்.
வருடம் முழுதும் பிறையை தொடர்ந்து தரிசித்தால் வம்ச விருத்தி ஆகும். நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும்.
மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால் சிவனின் சிரசையை நேரில் செய்வதாக அர்த்தம்.

இப்பொழுது தரிசிக்கும் போது கையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து மூடி கொண்டு 3 முறை சுற்றி இந்த சந்திரனின் மந்திரத்தை கூறி தரிசனம் செய்ய வேண்டும்.

சந்திரன் மூல மந்திரம்:

ஓம் ஸ்ரீம் க்ரீம் ஹீம் ரம் சம் சந்த்ராய நமஹ!

காயத்ரி மந்திரம்:

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத் !

சந்திர பகவான் என்னுடைய அறிவாற்றலை சிறக்க செய்து , என் வாழ்வில் அருள் புரியுமாறு வேண்டுகிறேன். எனது வறுமை அனைத்தையும் நீக்கி லக்ஷ்மி கடாச்சத்தை வணங்க உன்னை நான் வணங்குகின்றேன்.

இன்று முதல் இந்த பிறை தரிசிக்கும் பழக்கத்தை உண்டாக்கி கொண்டு வாழ்வில் வெற்றி பெறுங்கள்!
 

Follow Us:
Download App:
  • android
  • ios