Asianet News TamilAsianet News Tamil

எதிரிகளின் பார்வையில் இருந்து தப்பித்து,அவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் இருக்க இந்த பரிகாரத்தை பண்ணுங்க!

நம் கூடவே இருந்து நம்மை ஏமாற்றும் எதிரிகள் என்றும் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் எதிரிகள் என்றும் பல விதமான எதிரிகள் இருப்பார்கள். இப்படி எதிரிகளின் தொல்லையிலிருந்து நீங்கி வாழ்வில் முன்னேற்றம் மற்றும் சுபிட்சம் பெற எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

A  simple Remedy for protecting us from Enemies
Author
First Published Mar 22, 2023, 6:52 PM IST

நமது வாழ்வில் ஒவ்வொருவருக்கும் கண்ணுக்கு தெரிந்த எதிரிகள், கண்ணுக்கு தெரியாத எதிரிகள், நம் கூடவே இருந்து நம்மை ஏமாற்றும் எதிரிகள் என்றும் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் எதிரிகள் என்றும் பல விதமான எதிரிகள் இருப்பார்கள். இப்படி எதிரிகளின் தொல்லையிலிருந்து நீங்கி வாழ்வில் முன்னேற்றம் மற்றும் சுபிட்சம் பெற எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நாம் வாழ்வில் முன்னேற முன்னேற பேர்,புகழ்,வசதியை மட்டும் சம்பாதிப்பதில்லை இவைகளோடு எதிரிகளையும் சம்பாதிக்கிறோம். இந்த எதிரிகளிடம் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சில வழிபாட்டு முறைகளை நாம் பின்பற்றினால் நமது வாழ்க்கை சிறந்து மேலோங்கும்.

எதிரிகள் தொல்லை நீங்குவதற்கு :

வாழ்வில் ஒரு சிலருக்கு முன்னேற்றமானது சுலபமாக கிடைக்கும், சிலருக்கு போராடி தான் கிடைக்கும். எப்படி கிடைத்தாலும் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி வைப்பார்கள் அல்லது வேறு விதமான எதிர்மறை செயல் செய்வார்கள்.

இப்படி நம்முடன் இருப்பவர்களே நமது முன்னேற்றத்தை பார்த்து பொறாமை கொண்டு, நம்மை அடுத்த இலக்கிற்கு அடைய விடாமல் பல்வேறு விதங்களில் நமக்கு தொல்லை கொடுப்பார்கள். அது கண் திருஷ்டி அல்லது வேறு விதமான எதிர்மறை ஆற்றல் போன்றவைகள் மூலமாகவும் செய்யலாம்.

வசதி படைத்த பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள் போன்றவர்கள் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் முதலியவற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சில மாந்தீரிக மற்றும் தந்திரங்களை பின் பற்றி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நாம் எதிரிகளின் பார்வையில் இருந்து தப்பிக்க அவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் ,நம்மை நாமே பாதுகாத்து கொள்ள நமது வீட்டில் இருந்த படியே இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நமது எதிரிகளிடமிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தப்பித்துக் கொள்ள உக்கிரமான தெய்வங்களின் வழிபாடு தான் மிகச் சிறந்ததாக கூறப்படுகிறது. அப்படி குறிப்பிடுகையில் வாராஹி அம்மன், பத்ரகாளியம்மன், மகிஷாசுரமர்த்தினி, ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் போன்ற தெய்வங்களின் வழிபடுவதை கூறலாம்.

இந்த பரிகாரம் செய்வதற்கு சதுர வடிவிலான ஒரு மண் அகல் விளக்கு தேவை. இதனை அமாவாசை தினத்தன்று இந்த செய்தல் மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.

Summer Tips : கொளுத்தும் வெயிலிலும் வீடு ஜில்லுன்னு இருக்கனுமா?ஏசி எல்லாம் வேண்டாங்க!ஈஸியா இத பண்ணுங்க போதும்!

எதிரிகளின் தொல்லையிலிருந்து நீங்க பரிகாரம்:

இந்த பரிகாரம் செய்வதற்கு கற்பூரம், வேப்பங்குச்சி மற்றும் வேப்ப எண்ணெய் ஆகியவை எடுத்துக் கொண்டு வீட்டின் நிலை வாசளுக்கு வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கருப்பு நிறுத் துணியில் வேப்பங்குச்சிகளை உடைத்து போட்டு முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். அகல் விளக்கை வெளியில் வைத்து விட வேண்டும்.

இந்த முடிந்து வைத்துள்ள முடிச்சில் கற்பூரம் ஒன்று வைத்து, சிறிது வேப்பெண்ணெய் விட வேண்டும். இப்போது மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி அதில் கற்பூரத்தை பற்ற வைக்க வேண்டும். இப்படி செய்யும் போது உங்களுக்கு விருப்பமான அல்லது உங்கள் ஊர் எல்லையில் இருக்கும் தெய்வத்தை நினைத்து செய்தல் வேண்டும். இதனை அம்மாவாசை தினத்தன்று மாலை நேரத்தில் செய்வது நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios