Asianet News TamilAsianet News Tamil

ஆனி அமாவாசை 2024 : வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்க பெண்கள் இதை செய்தா போதும்..

ஆனி அமாவாசையான இன்று பெண்கள் ஒரு எளிய பரிகாரத்தை செய்வதால் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி சுபிக்ஷம் கிடைக்கும். அது என்ன பரிகாரம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

Aani Amavasai 2024 : Simple Remedy for To get rid of all family problems Rya
Author
First Published Jul 5, 2024, 8:50 AM IST | Last Updated Jul 5, 2024, 3:18 PM IST

அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரத நாட்களில் ஒன்றாகும்.. அமாவாசை நாளில் விரதம் இருந்து வழிபட்டால் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்று ஆனி மாத  அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. ஆனி அமாவாசை மிகவும் சிறப்புவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை வழிபட்டால் முன்னோர்களின் ஆசியை பெற முடியும்.

மேலும் இன்று வெள்ளிக்கிழமை உடன் சேர்ந்து அமாவாசை வருவது தனிச்சிறப்பாகும். அதிலும் தெய்வ வழிபாட்டுக்குரிய ஆனி மாதத்தில் வெள்ளிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
எனவே இன்று பெண்கள் ஒரு எளிய பரிகாரத்தை செய்வதால் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி சுபிக்ஷம் கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைப்பதில் இருந்த தடைகள் நீங்கும். குறிப்பாக பித்ரு தோஷம், முன்னோர்களின் சாபம் ஆகியவை நீங்கி குடும்பத்தில் நன்மைகள் பெருகும். 

அதிகாலையில் வரும் கனவு பழிக்குமா..? ஜோதிடம் சொல்வது என்ன..?

ஆனி மாத அமாவாசையில் அதிகாலை எழுந்த உடன் குளித்து விட்டு, ஆண்கள் வழக்கம் போல் பித்ரு தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட வேண்டும். முடிந்தால் கோயிலுக்கு சென்று வந்தால் நல்லது. பெண்களும் இன்று பொழுதுக்குள் முன்னோர்களை வழிபட்டு, இன்று மாலை 6 மணிக்கு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். முதலில் குலதெய்வத்தை வழிபட்டு பின்னர் இஷ்ட தெய்வத்தை வழிபடலாம். 

பின்னர் ஒரு தாம்பூலத்தில் 2 வெற்றிலை, 2 பாக்கு, 2 வாழைப்பழம், சிறிது பூ, மஞ்சள் ,குங்குமம் ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை வைக்க வேண்டும். முடிந்தால் ரவிக்கை துணி கூட வைக்கலாம். இதே போல் 5 தாம்பூலங்களை தயார் செய்து, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்னர் வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து வழிபட்டு, பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ள தாம்பூலத்திற்கு கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். 

வாஸ்து படி காலையில் எழுந்தவுடன் இந்த 3 பார்க்காதீங்க.. இல்லையெனில் வறுமை உங்களை வாட்டி வதைக்கும்!

பின்னர் இந்த தாம்பூலத்தை 5 சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். ஏழை பெண்களுக்கு கொடுத்தால் மிகவும் சிறப்பு.. அல்லது கோயிலுக்கு எடுத்து சென்று கூட அங்கு வைத்து கொடுக்கலாம். மிகவும் எளிமையான இந்த பரிகாரம் செய்வதால் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான கஷ்டங்கள், தடைகள் நீங்கி சுபிக்ஷம் பிறக்கும் என்பது ஐதீகம். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios