விஜயகாந்த் மைத்துனர் சுதீஷிடம் இருந்து, தேமுதிக ., இளைஞரணி செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி .இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்த்உடல்நலக்குறைவால்அவதிப்பட்டுவரும்நிலையில், கட்சிப்பணிகளில்சுணக்கம்ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும்சிலநாட்களில் சிகிச்சைக்காகஅமெரிக்காசெல்லஇருப்பதாகக்கூறப்படுகிறது. இதனால் நிர்வாக அளவில் தேமுதிகவில் பல மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் முதல் கட்டமாக கடந்த வாரம் தேமுதிகவின் பொருளாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நியமிக்கப்பட்டார். அவர் இது வரை எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் இருந்து வந்தார்.

அவரதுமைத்துனர்எல்.கே.சுதீஷ்இளைஞரணிசெயலாளராகஇருந்துகட்சியைவழிநடத்திவந்தபோதும், குடும்பஅரசியல்என்கிறசர்ச்சைஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், எல்.கே.சுதீஷ்வகித்துவரும்இளைஞரணிசெயலாளர்பதவியில்விஜயகாந்தின்மூத்தமகன்விஜய பிரபாகரனைநியமிக்கஉள்ளதாகக்கூறப்படுகிறது.
விஜயகாந்தின்நேரடிவாரிசுஎன்பதால்சர்ச்சைகள்எழவாய்ப்பில்லைஎன்பதால்அவர்நியமிக்கப்படஉள்ளார். கட்சிப்பணிகளைஅவரேநேரடியாகக்களத்தில்இறங்கிக்கவனிக்கஉள்ளார் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே தேமுதிக ., இளைஞரணிசெயலராக, இருந்த விஜயகாந்தின்மைத்துனர், சுதீஷ், ஓராண்டுக்குமுன்மாநிலதுணைச்செயலராக,நியமனம்செய்யப்பட்டார்.அதன்பின், இரண்டுபதவிகளையும், அவர்வகித்தார்.
இந்நிலையில் தற்போது, இளைஞரணிபதவி, சுதீஷிடம்இருந்துபறிக்கப்பட்டுள்ளது. அவருக்குபதிலாக, இளைஞரணிசெயலராக, முன்னாள்எம்எல்ஏ நல்லதம்பிநியமிக்கப்பட்டுள்ளார். 'இவருக்கு, கட்சிநிர்வாகிகள்மற்றும்தொண்டர்கள்முழுஒத்துழைப்புதரவேண்டும்' என,விஜயகாந்த்கூறியுள்ளார்.

அதே நேரத்தில் நல்லதம்பி சில நாட்கள் இந்த பதவியில் இருப்பார் என்றும் விரைவில் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் இளைரணி செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
