Asianet News TamilAsianet News Tamil

கல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..! போலீசார் தீவிர விசாரணை..!

சங்கரன்கோவில் அருகே கல் அரைக்கும் கிரசர் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Worker dies after falling on stone crusher ..! Police are conducting a serious investigation ..!
Author
Thirunelveli, First Published Sep 29, 2020, 9:54 PM IST

சங்கரன்கோவில் அருகே கல் அரைக்கும் கிரசர் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம். அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்
ராஜா. இவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள திருவேங்கடம் அருகே உள்ள குண்டம் பட்டியில் மண் அரைக்கும் கிரசர் இயந்திர ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.வழக்கம்போல் ராஜா வேலைக்கு  சென்றிருந்தார். வேலையின் போது ராஜா தவறி விழுந்ததில் இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக கூறப்படுகிறது.

Worker dies after falling on stone crusher ..! Police are conducting a serious investigation ..!

இந்த சம்பவம் குறித்துக் குறிப்பிட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த திருவேங்கடம் போலீசார், ராஜாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே ஆப்ரேட்டராக பணியாற்றிய ராஜாவிற்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருவேங்கடம் போலீசார் ராஜா எப்படி உயிரிழந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios