- Home
- Tamil Nadu News
- Maternity Leave: 3-வது குழந்தைக்கும் 1 வருஷ லீவு! அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு
Maternity Leave: 3-வது குழந்தைக்கும் 1 வருஷ லீவு! அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டிருக்கு. இனிமே மூன்றாவது குழந்தைக்கும் 12 வாரங்களுக்கு பதிலா 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு கிடைக்கும். இது பெண்களின் நலன், அதிகாரமளித்தலுக்கான முக்கியமான நடவடிக்கைன்னு அரசு சொல்லியிருக்கு.

மாற்றத்தை அறிவித்த முதல்வர்.! சந்தோஷத்தில் பெண்கள்.!
மகப்பேறு விடுப்பு விதிகளி என்ன மாற்றம்
மகப்பேறு விடுப்பு விதிகள்
எப்போது நடைமுறைக்கு வரும்
இந்த மாற்றம், அரசுப் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிறப்புக்குப் பிறகு ஓய்வெடுக்கவும், குழந்தையைக் கவனித்துக் கொள்ளவும் அதிக நேரத்தை வழங்கும். தற்போதுள்ள 84 நாட்கள் விடுப்பு, 365 நாட்களாக மாறுவது ஒரு பெரிய வித்தியாசம். இந்த அறிவிப்பு அரசாணை மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.
இந்தியாவின் மகப்பேறு சட்டம் என்ன சொல்கிறது?
தமிழ்நாட்டின் இந்த முடிவு மாநில அரசு ஊழியர்களுக்கானது. இது இந்தியாவில் உள்ள அனைத்து பெண் ஊழியர்களுக்கும் பொருந்தாது. தேசிய அளவில், மகப்பேறு நலச் சட்டம், 1961-ன்படி, இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட பெண்களுக்கு 26 வாரங்கள் வரை விடுப்பு வழங்கப்படுகிறது. இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், 12 வாரங்கள் விடுப்பு கிடைக்கும். தத்தெடுக்கும் தாய்மார்களுக்கும் இந்தச் சட்டத்தில் விதிகள் உள்ளன.
முதல்வர் விஜய் எடுத்த முக்கிய முடிவு
சட்டப்பேரவை அறிவிப்பு ஒரு முக்கியமான படி என்றாலும், அரசாணை வெளியான பிறகே இது நடைமுறைக்கு வரும். இந்த 365 நாட்கள் விடுப்பு எந்தெந்த ஊழியர்களுக்கு, எப்படிப் பொருந்தும் என்பது போன்ற விவரங்கள் அந்த அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்படும். அதுவரை, ஊழியர்கள் இந்த புதிய விதியின் கீழ் விடுப்பு கோரக் காத்திருக்க வேண்டும். இந்த அறிவிப்பு முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால், முதல் இரண்டு குழந்தைகளைப் போலவே மூன்றாவது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

