காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதை கருத்தில் கொண்டு செப்டம்பர் 7 வரை இடைத்தேர்தல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், அண்மையில் கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது குறித்து வழிகாட்டு நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.


இந்நிலையில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு தேர்தல் ஆணையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது, அதில், “பீகார் சட்டப்பேரவைத் தேர்தலோடு சேர்த்து நாட்டில் காலியாக உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. பருவ மழை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை இடைத்தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டும் என்று சில மாநிலங்களின் தலைமை செயலாளர்களும் தேர்தல் அதிகாரிகளும் கேட்டுக்கொண்டனர்.