அதிமுக கூட்டணியால் பாஜக இருந்தால் அதிமுக அதிமுக தோற்கும் என்ற கருத்து முற்றிலும் முரணானது என்று தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டணியால் பாஜக இருந்தால் அதிமுக அதிமுக தோற்கும் என்ற கருத்து முற்றிலும் முரணானது. தமிழகத்தில் நாங்குநேரி உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.
அதிமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தல் என்று வரும்போது மக்கள் அதிமுகவுக்கே வாக்களிப்பார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு. சசிகலா விடுதலையாகி வெளியே வரட்டும் பார்க்கலாம்.” என்று ஒ.எஸ். மணியன் தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 10, 2021, 9:27 PM IST