கேரள அரசு காவல் துறை உதவியுடன் சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் 2 பெண்கள் யார் என்பது குறித்த பரபர தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அங்கு ஏராளமான பெண்கள் தரிசனம் செய்ய முற்பட்டனர். ஆனால் அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் அவர்களை கோவிலுக்கு செல்ல அனுமதி மறுத்து போராட்டம் நடத்தி வருகினறனர்.
கேரள அரசும் போலீஸ் உதவியுடன் பெண்களை கோவிலுக்குள் கொண்ட செல்ல முயற்சி செய்தது. ஆனால் பக்தர்கள் பிடிவாதமாக அவர்களை உள்ளே விடமறுத்து வந்தனர். இதனைக் கண்டித்து நேற்று முன்தினம் கேரளாவில் 30 லட்சம் பெண்கள் பங்கேற்ற வனிதா மதில் என்ற மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அந்த சூட்டோடு சூடாக கேரள அரசு செய்த காரியம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சன்னிதானத்துக்குள் நுழைய முறன்று திருப்பி அனுப்பட்ட பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்ககளை காவல் துறையை பக்தர்களின் கண்களில் மண்ணைத் தூவி நேரடியாக சன்னிதானத்துக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிந்து மற்றும் கனகதுர்கா ஆகியோர் குறித்த பின்னனி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சபரிமலைக்குச்சென்றஇருபெண்களில்ஒருவர்பிந்து. இவரதுவயது 42. கோழிக்கோடுமாவட்டத்தைச்சேர்ந்தவர். வழக்கறிஞரானஇவர், தற்போதுகண்ணூர்பல்கலைக்கழகத்தின்கீழ்இயங்கும்தலசேரிபாலயட்சட்டக்கல்லூரியில்பேராசிரியையாகப்பணியாற்றிவருகிறார். இவர்மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட்கட்சிஆர்வலர்.
இன்னொருபெண்ணானகனகதுர்கா, மலப்புரம்மாவட்டம்அங்காடிபுரத்தில்வசித்துவருகிறார். இவரதுவயது 44. சிவில்சப்ளைஸ்துறையில்தற்காலிகஊழியராகப்பணியாற்றிவருகிறார்.

கனகதுர்கா. சபரிமலைசெல்லும்இவரதுமுடிவுக்கு, குடும்பத்தினர்கடும்எதிர்ப்புதெரிவித்துள்ளனர். சபரிமலையில்உள்ளவழக்கங்களைமாற்றத்தாங்கள்விரும்பவில்லைஎன்றுகூறியுள்ளனர்.
இதுகுறித்துத்தாங்கள்கவலையாகஉள்ளதாகவும், கடந்தசிலநாட்களாகத்தங்கள்சகோதரியைக்காணவில்லைஎன்றும், போலீசாரும்அதுகுறித்துத்தகவல்தெரிவிக்கவில்லைஎன்றும்கனகதுர்காவின்சகோதரர்பாரத்பூஷன்தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் முழுக்க முழுக்க கேரள அரசின் திட்டமிட்ட நாடகம் என இந்து அமைப்புகள் கொந்தளித்து வருகின்றன.
