Asianet News TamilAsianet News Tamil

விஜயகாந்த் வீட்டிலேயே கைவரிசையைக் காட்டிய திருடன்கள்… புது பண்ணை வீட்டில் இருந்த பசு மாடுகள் மாயம் …

சென்னை காட்டுப்பாக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் புதிதாக கட்டி வரும் வீட்டில் இருந்து 2 பசு மாடுகள் மாயமாகி இருப்பதாக பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

vijayakanth house 2 cow theft
Author
Chennai, First Published Oct 12, 2018, 10:27 AM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் புதிதாக  பண்ணை வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த பண்ணை வீட்டில் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

vijayakanth house 2 cow theft

இந்த பண்ணை வீட்டில் இருந்துதான் விஜயகநத் வீட்டுக்க்கு பால் சப்ளை செய்யப் படுவதாக கூறப்படுகிறது. இந்லையில் நேற்று இரவு பண்ணை வீட்டில் உள்ள பசுக்களுன்கு வேலையாள் தீவனம் வைத்துவிட்டு படுக்கச் சென்றுவிட்டார்.

அதிகாலையில் வழக்கம் போல் 3 மணிக்கு எழுந்து அந்த வேலையாள் பால கறப்பதற்காக சென்றபோது, 2 பசு மாடுகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

vijayakanth house 2 cow theft

உடனடியாக அவர் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால் மாடுகளை காணவில்லை. இதையடுத்து விஜயகாந்த் வீட்டுக்கு தகவல் கொடுத்த அந்த வேலையாள் உடனடியாக இது குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

vijayakanth house 2 cow theft

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios