Asianet News TamilAsianet News Tamil

ஓஹோ அப்படிப்போகுதா கதை? பார்த்தீர்களா இவங்க அக்கறையும், அவசரத்தையும்...உசுப்பேத்தும் வீரமணி

உயர்ஜாதியினருள் ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது சட்ட விரோதமானது - ஏற்கெனவே உயர் நிறு வனங்களில் 28 சதவிகித இடங்களை அனுபவிக்கும் இந்தப் புளியேப்பக்காரர் களுக்கு மேலும் பந்தியில் இடம் என்பது சமுக அநீதி - மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் திட்டமிட்ட சமுகநீதிக்கு எதிரான நடவடிக் கைகளிலிருந்து சமுகநீதியை மீட்டெ டுக்க சமுகநீதியாளர்கள் ஒன்று சேர வேண்டும்  என்று  கி.வீரமணி கூறியுள்ளார். 
 

Veeramani Raise question against BJP Govt
Author
Delhi, First Published Jul 3, 2019, 1:28 PM IST

உயர்ஜாதியினருள் ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது சட்ட விரோதமானது - ஏற்கெனவே உயர் நிறு வனங்களில் 28 சதவிகித இடங்களை அனுபவிக்கும் இந்தப் புளியேப்பக்காரர் களுக்கு மேலும் பந்தியில் இடம் என்பது சமுக அநீதி - மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் திட்டமிட்ட சமுகநீதிக்கு எதிரான நடவடிக் கைகளிலிருந்து சமுகநீதியை மீட்டெ டுக்க சமுகநீதியாளர்கள் ஒன்று சேர வேண்டும்  என்று  கி.வீரமணி கூறியுள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;  நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தின் மக்களவையில், 10 விழுக்காடு பொரு ளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய ஜாதிக்காரர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் சென்ற நாடாளுமன்றத்தில், அவசரக் கோலம் - அள்ளித் தெளித்த கதை பற்றி யெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக மக்களவை கொறடாவும், மேனாள் மத்திய அமைச்சருமான மானமிகு ஆ.ராசா அவர்களது உரை ஒரு அற்புதமான - சமுகநீதி வரலாற்றை - பல நூற்றாண்டு வரலாற்றை (Putting Centuries into a Capsules) ஒரு சிறு மாத்திரைக்குள் அடக் கியதுபோல், ஆதாரப்பூர்வ விளக்கம் அளித்த உரையும், முடித்த முறையும் மிகவும் பாராட்டத்தக்கது.

ஜஸ்டிஸ் ஓ.சின்னப்ப ரெட்டியாரின் கருத்து

நாங்கள் இனி ஒருபோதும் ஏகலை வன்களாக இருக்கமாட்டோம்; துரோணாச் சாரிகளின் காலம் முடிந்துவிட்டது'' என்று கூறி குறுகிய நேர உரையை நிறைவு செய்தார்!

உச்சநீதிமன்றத்தின் முற்போக்கு சிந்த னையாளரும், ஒரு ஆழ்ந்த சமுகநீதி, சமதர்ம கொள்கையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின், மதச்சார்பற்ற சமுகநீதித் தத்து வத்திற்குச் சரியான விளக்கங்களை தனது வரலாற்று முக்கியத் தீர்ப்புரைகளில் தெளிவு படுத்தியவருமான ஜஸ்டிஸ் ஓ.சின்னப்ப ரெட்டி அவர்கள் - வசந்தகுமார் வழக்கில் கருத்துரை கூறுகையில்,

‘‘The Days of Dronochariya and Ekalaiva's are over...'' என்று எழுதியதை வேறு சொற்களில் அழகாக நேற்று நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார் - டில்லி உச்சநீதிமன்ற வழக்குரைஞரும், நாடாளு மன்ற உறுப்பினருமான தோழர் ஆ.இராசா எம்.ஏ., எம்.எல். அவர்கள்.

நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களின் சிறந்த பணி!

மத்தியில் மோடி அவர்கள் தலைமையில் பெருத்த பலத்துடன் ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில், இவர்கள் 38 பேர் (புதுவை உள்பட) வெற்றி பெற்றுச் சென்று என்ன பயன்? என்று புரியாமலோ அல்லது வேண்டுமென்றோ கேட்டவர்களின் வாதங் களைக் கிழித்தெறிவதுபோல், நாடாளு மன்றத்தில் பதவியேற்பில் தமிழ் வாழ்க', பெரியார் வாழ்க'வெனத் தொடங்கி, ஒவ் வொரு தி.மு.க. எம்.பி.,யும் சரியான எதிர்க் கட்சியாக, ஆளும் பெருத்த கட்சியைத் திகைக்க வைக்கும் வகையில், இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு, நீட்' தேர்வு விலக்கு, வறட்சி, அய்ட்ரோ கார்பன் திட்டத் திணிப்பு போன்ற பல அநீதிகளை விளக்கி, தங்களது அறிவார்ந்த வாதங்கள்மூலம் நாடாளுமன்றத்தில் ஒரு திருப்பத்தையே உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

இமை தூங்கா ஜனநாயகக் காவலர்களாக இரு அவைகளிலும் தி.மு.க. எம்.பி.,க்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள் முத்திரை பதித்து வருகின்றனர்!

ஆ.இராசா எம்.பி., சுட்டிக் காட்டியுள்ளார்

10 சதவிகித (கூடுதல்) இட ஒதுக்கீடு முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கு என்பது சமுகநீதித் தத்துவத்தின் வேரில் வெந்நீர் ஊற்றுவதே!

தோழர் ஆ.இராசா அவர்கள் சுட்டிக் காட்டிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) அரசு போட்ட நாடாளுமன்ற சின்கா கமிட்டி,  ஏழைகளுக்குப் பொருளாதார ரீதி யாக உதவலாமே தவிர, இட ஒதுக்கீடு, கல்வி, உத்தியோகத்தில் (அவர்கள் தங்கள் விகி தாச்சாரத்திற்குமேல் ஏற்கெனவே இருப்ப தால்) அவர்களுக்குத் தர முடியாது. இட ஒதுக்கீடு சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர் கள், பழங்குடி (மலைவாழ்) மக்களுக்கு மட்டுமே எனப் பரிந்துரைத்தது!

இது சம்பந்தமாக நம்மைப் போன்ற பலராலும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை இம்மாதம் ஜூலை 30 ஆம் தேதி அரச மைப்புச் சட்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரை ஞரும், சட்ட நிபுணருமான ராஜீவ் தவான் இவ்வழக்கினை விரைந்து விசாரிக்க எடுத் துக்கொள்ளப்படுதல் அவசியம் என்பதைக் கூறியுள்ளதோடு,

இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பு என்ன?

இந்திரா சகானி வழக்கில் - மண்டல் வழக்கின்'' தீர்ப்பின்படி வெறும் பொருளா தார அடிப்படையில் இட ஒதுக்கீடு அமைய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துவிட்டது. 27 ஆண்டுகளுக்குப் பின்பு (1992) இப்படி ஒரு 103 ஆவது அரச மைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு - நிறைவேற்றப்பட்டிருப்பது முற்றிலும் சட்ட விரோதம் என்பதையும் சுட்டியுள்ளார் மானமிகு ஆ.இராசா.

ஆனால், உயர்ஜாதியினர் உயர்கல்வி நிறுவனங்களில் தங்கள் விகிதாச்சாரத்திற்கும் மிக அதிகமாகவே தற்போது பேராசிரியர் களாக, துணைப் பேராசிரியர்களாக இடம் பெற்றுள்ளவர்களாகவே உள்ளனர் என்பதை மும்பையிலிருந்து வெளிவரும் எகனா மிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லியில் (Economic and Political Weekly) (ஜூன் 8, பக்கம் 12) 5 பல்கலைக் கழக ஆய்வாளர்கள், அறிஞர்கள் எழுதியுள்ள ஓர் கட்டுரையில் வெளிவந்துள்ள தகவல்கள்.

மத்திய கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் 10 சதவிகிதம் பொருளா தாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய ஜாதிக்காரர்களுக்கு ஒதுக்கி அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரக் கார ணம் அவர்களுக்குரிய இடங்கள் கிடைக்க வில்லை என்று கூறியே!

ஆனால், உண்மை நிலை என்ன?

இந்த 5 ஆய்வாளர்களும் National Institution Ranking Frame work (NIRF) என்ற மத்திய மனிதவள (கல்வி) துறையின்கீழ் இயங்கும் - அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் துறைகளில் படிக்கும் பொருளா தாரத்தில் பின்தங்கிய முன்னேறிய ஜாதி மாணவர்கள் எண்ணிக்கை பற்றிய இந்தியா முழுவதும் 445 உயர்கல்வி நிறுவனங்களில் (2018 கணக்குப்படி) ஆய்வு செய்ததில், அவர்கள் ஏற்கெனவே 28 சதவிகித இடங் களைப் பெற்றுள்ளனர், கல்வி கற்று வருகின்றனர் (There  is no Under Represen tation - in fact over represention) என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்!

புளியேப்பக்காரர்களுக்குத்தான் பந்தியில் இடமா?

இந்நிலையில், மீண்டும் இப்படி ஒரு புளியேப்பக்காரர்களுக்கு' பந்தியில் மேலும் கூடுதல் விருந்து ஏன்?

பசியேப்பக்காரர்களான - ஆயிரக்கணக் கான ஆண்டுகள் கல்வி மறுக்கப்பட்ட ஏகலைவர்கள்'' நிலை என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 15, 16 ஆகிய அடிப்படை கல்வி, உத்தியோக உரிமைகள்படி, அவர்களுக்கென்று போதிய பிரதிநிதித்துவம் (Adequate represen tation) கிடைத்துள்ளதா?

மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை!

2.7.2019 அன்று வெளிவந்துள்ள ஆங்கில இந்து' நாளேட்டில், அனிஷ்குப்தா, ஆலேய கிரி என்ற இரு டில்லி பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையில்,

மத்திய பல்கலைக்கழகங்களில் போதிக்கும் கல்விப் பேராசிரியர்களுக்கான இட ஒதுக்கீடு அவசரச் சட்டம் - நேற்று மக்களவையில் நிறைவேறியுள்ளது.

மத்திய பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய ஒதுக்கீடு, எஸ்.சி., எஸ்.டி., க்கான பேராசிரி யர்கள் ஒதுக்கீடு 13 பல்கலைக் கழகங்களில், 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.

ஆனால், முன்னேறிய ஜாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்குக் கூடுதல் இடங்கள், கூடுதல் நிதி உதவி எல்லாம் விரைந்து தாராளமாக, ஏராளமாக வேக வேகமாக வாரி இறைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ஓ.பி.சி., பிற்படுத்தப் பட்டோருக்கு 27% என்பதை நிரப்பாமல், வெறும் 9.8% தான் நிரப்பப்பட்டுள்ளது. மேல் பதவிகளிலேயோ வெறும் 1.22%, 1.44% தான், துணைப் பேராசிரியர்கள், பேராசிரி யர்கள் பதவிகளில் ஒதுக்கீடு'' என்று குறிப் பிட்டுள்ளனர்.

பல்கலைக் கழகங்களில் 8,000 பதவிகள் நிரப்பப்படுகின்றன. 770 கோடி ரூபாய் உயர் ஜாதி 10 சதவிகித கூடுதல் இடங்களுக்கான நிதி ஒதுக்கீடு.

எவ்வளவு இதில் அக்கறையும், அவசரமும் பார்த்தீர்களா?

சமுகநீதியாளர்களே,


இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வாரீர்!

இப்படி சமுகநீதியின் அடித்தளத்தையே பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசு உடைத்து நொறுக்கி வருகிறது. சமுகநீதிப் போராளிகளே, ஒடுக்கப்பட்டோரே ஒன்று சேருங்கள்! உரிமைகளை 

நிலைநாட்ட, மீட்டெடுக்க வாரீர்! வாரீர்! என இவ்வாறு கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios