Asianet News TamilAsianet News Tamil

படுதோல்வியை பக்கவா சமாளிச்ச டிடிவி! அசரவைக்கும் பலே காரணம்!

தமிழகத்தில், திமுக, அதிமுக, காட்சிகளுக்கு பின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது அமமுக கட்சி. மிக குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் அமமுக கட்சியை பிரபலப்படுத்தி, ஆர்.கே.நகர் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் என்கிற அந்தஸ்தையும் பெற்றார்.
 

ttv dinakaran twitter
Author
Chennai, First Published May 23, 2019, 7:53 PM IST

தமிழகத்தில், திமுக, அதிமுக, காட்சிகளுக்கு பின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது அமமுக கட்சி. மிக குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் அமமுக கட்சியை பிரபலப்படுத்தி, ஆர்.கே.நகர் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் என்கிற அந்தஸ்தையும் பெற்றார்.

இந்நிலையில், இவர் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளார். திமுக தமிழகத்தில் மட்டும் 38 மக்களவை தொகுதியை கைப்பற்றியுள்ளது. அதிமுக 1 தொகுதியை தக்கவைத்துள்ளது. 

ttv dinakaran twitter

தற்போது இது குறித்து, அமமுக தலைவர், டிடிவி தினகரன், அவருடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவை இப்போது பாப்போம்..

"மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்!
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது.

ttv dinakaran twitter

எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு- பகல் பார்க்காமல் உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும்,  கழகத்திற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்' என்று பதிவிட்டுள்ளார்.ஃ`

Follow Us:
Download App:
  • android
  • ios