Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவிடம் பேசியது இதுதான் - டிடிவி தினகரன் தகவல்...!

I told Sasikala the victory in RKNagar
ttv dinakaran I told Sasikala the victory in RKNagar
Author
First Published Dec 28, 2017, 3:37 PM IST


ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதை சசிகலாவிடம் தெரிவித்தேன் எனவும் அவர் மவுன விரதம் இருப்பதால் நான் பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டார் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். வாழ்வா சாவா போட்டியில் அதிமுகவை வீழ்த்தி அரசியல் இருப்பை உறுதி செய்துள்ளார் தினகரன். 

அதிமுக அரசு, மத்திய பாஜக அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் பல்வேறு நெருக்கடிகளையும் மீறி அபார வெற்றி பெற்ற தினகரனுக்கு, அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரும் அமைச்சர்கள் சிலரும் வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

வரும் ஜனவரி 8ம் தேதி சட்டசபை கூடுகிறது. சட்டசபைக்கு முதல்முறையாக செல்லும் தினகரன், ஆட்சியாளர்களுக்கு எதிராக பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக வலுவான குரலை எழுப்ப வாய்ப்புள்ளது.

ஆர்.கே.நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டியிட சசிகலா மறுப்பு தெரிவித்ததாகவும் அவரை சமாதானப்படுத்தியே தினகரன் தேர்தலில் நின்றதாகவும் தகவல்கள் உலவின. இந்நிலையில், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு சொன்னபடியே வெற்றியும் பெற்ற தினகரன், வெற்றி களிப்பில் சசிகலாவை சந்தித்துள்ளார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதை சசிகலாவிடம் தெரிவித்தேன் எனவும் அவர் மவுன விரதம் இருப்பதால் நான் பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டார் எனவும் தெரிவித்தார். 

சசிகலாவிடம் ஆசிர்வாதம் வாங்கினேன் எனவும் வருங்கால நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தேன் எனவும் கூறினார். 

மேலும் ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து வரும் 8 ஆம் தேதி வரை சசிகலா மவுன விரதம் இருக்கிறார் எனவும் அதிமுக தொண்டர்கள் ஆட்சியாளர்களை முற்றிலும் புறக்கணித்து விட்டனர் எனவும் குறிப்பிட்டார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios