Asianet News TamilAsianet News Tamil

இரவில் ஆண்களை அனுப்பி டார்ச்சர்.. பாஜக சீரியல் நடிகை அட்ராசிட்டி.? கமிஷனர் அலுவலகத்தில் பெண்கள் கதறல்.

அதில் பாஜகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி எங்கள் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வங்கி மூலம் 10 பைசா வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக கூறி ஒன்பது பெண்களுக்கு வங்கி மூலம் லோன் பெற்று தந்தார். 

Torture sent men at night .. BJP serial actress atrocity.? Women Screaming in the commissioner's office.
Author
Chennai, First Published Sep 14, 2021, 2:18 PM IST

வாங்கிய கடனுக்கு தகுந்த வட்டி செலுத்திவிட்ட பிறகும் இரவு நேரத்தில் ரவுடிகளை அனுப்பி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுவதாக பாஜகவைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜெயலட்சுமி, இவர் பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். பாஜக அபிமானியாக இருந்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 

Torture sent men at night .. BJP serial actress atrocity.? Women Screaming in the commissioner's office.

பாஜக நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாகப்  பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசிவிட்டார் எனக்கூறி பாஜக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் திருமாவளவனை மேடையில் மிக கடுமையாக விமர்சித்தவர் ஜெயலட்சுமி, இந்நிலையில் சென்னை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இவர் மீது பரபரப்பு புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை பாடிய சேர்ந்தவர் கீதா, மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த சில பெண்களுக்கு வங்கி ஒன்றின் மூலம் ஜெயலட்சுமி பத்து பைசா வட்டி விகிதத்தில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். குறைந்த வட்டி தான் என்பதினால் அந்த பெண்களும் ஜெயலட்சுமியிடமிருந்து கடன் வாங்கியுள்ளனர். அவர்களும் மாதமாதம் வட்டி செலுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த பெண்களைச் சந்தித்த ஜெயலட்சுமி, நீங்கள் இதுவரை கொடுத்தது வட்டி மட்டும் தான், அசல் பாக்கி அப்படியே இருக்கிறது என கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்கள்,சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.  

Torture sent men at night .. BJP serial actress atrocity.? Women Screaming in the commissioner's office.

அதில்,பாஜகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி எங்கள் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வங்கி மூலம் 10 பைசா வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக கூறி ஒன்பது பெண்களுக்கு வங்கி மூலம் லோன் பெற்று தந்தார். அதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவர் வங்கிக் காசோலைகளை ஜாமீனாக பெற்றார். நாங்களும் மாதந்தோறும் தவறாமல் பணத்தைச் செலுத்தி வந்தோம், ஆனால் தற்போது நாங்கள் கொடுத்த தொகை வட்டி மட்டும்தான் என்று கூறி அசல் தொகையை தருமாறு கேட்டு வருகிறார். ஜெயலட்சுமி, அனகா மற்றும் வழக்கறிஞர் சார்லஸ் ஆகியோர் இணைந்து பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர். அதோடு இரவு நேரத்தில் எங்கள் வீடுகளுக்கு ஆண்களை அனுப்பி மிரட்டுகிறார் என அந்தப் பெண்கள் புகார் கொடுத்துள்ளனர்.  சமீபகாலமாக பாஜகவை சேர்ந்த பலர் பண மோசடியில் ஈடுபட்டு அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த பிரபல நடிகை மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார் கொடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios