அமைச்சருக்கு அங்கு என்ன வேலை.. நடையை கட்டு.!! அமைச்சர் சேகர்பாபுவை எச்சரிக்கும் பாஜக எச்.ராஜா
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கும் கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் சந்தித்து சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி விளக்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது இல்லை. நம்மை ஆண்ட மன்னர்களால், முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோயில். அந்த திருக்கோயிலில் வருகின்ற வருமானங்கள் குறித்து முறையாக கணக்கு கேட்கின்றபோது, கணக்கு காட்டுவது தீட்சிதர்களின் கடமை. அதேபோல் நிர்வாகத்தில் இருக்கின்ற குளறுபடிகள் தொடர்பாக கேள்வி எழுப்பும்போதும், பதிலளிக்க வேண்டியது அவர்களுடைய கடமை.
இதையும் படிங்க..நவம்பர் 11.! பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில் - 2024 கூட்டணிக்கு அடித்தளமா.?
திருக்கோயிலின் உள்ளே அவர்கள் இஷ்டத்திற்கு மானாவாரியாக கட்டடங்களை எழுப்பியிருக்கின்றனர். அவ்வாறு எழுப்பியுள்ள கட்டடங்கள் குறித்து கேள்வி கேட்பது இந்துசமய அறநிலையத்துறையின் கடமை. அந்த திருக்கோயிலில் மன்னர்களால் சேர்த்துவைக்கப்பட்டு, விட்டுச்சென்றுள்ள நகைகள், சொத்துகள், விலைமதிப்பற்ற பொருட்களினுடைய நிலை குறித்து ஆய்வு செய்வது இந்துசமய அறநிலையத்துறையின் கடமை.
இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. எனவே எங்களுடைய பணி நியாயத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. தாராளமாக அவர்கள் அவமதிப்பு வழக்கு தொடரலாம். அதற்கு சரியான விளக்கத்தை நாங்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார். அமைச்சர் சேகர்பாபு கருத்துக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அறநிலையத்துறை கட்டியதா ? பின் அத்துறைக்கும் அமைச்சருக்கும் அங்கு என்ன வேலை. நடையை கட்டு’ என்று பதிவிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க..கமலா ஹாரிஸ் மட்டுமா.! அமெரிக்க இடைத்தேர்தலில் அசத்திய இந்தியர்கள் !! யார் யார் தெரியுமா ?