Asianet News TamilAsianet News Tamil

கண் திருஷ்டியாலதான் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைஞ்சு போச்சு… இப்படி சொன்னது யார் தெரியுமா ?

ஜெயலலிதா மறைந்த பிறகு பல பிரச்சனைகளை சமாளித்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசு மீது பட்ட கண் திருஷ்டியால் தான் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்து போனதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

The eyes of the fringe of the mukkombu dam  damaged
Author
Sivakasi, First Published Sep 3, 2018, 1:07 AM IST

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு மாறாக எதிர்க்கட்சியினர் புகார் கூறி வருகின்றனர் என தெரிவித்தார்.

The eyes of the fringe of the mukkombu dam  damaged

டி.டி.வி.தினகரன் குறித்து மன்னார்குடியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பேசியது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆம்.பி.உதயகுமார், . உண்மையும், ஆதாரமும் இல்லாமல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதையும் கூற மாட்டார் என கூறினார்.

The eyes of the fringe of the mukkombu dam  damaged

ஊழல் புகாரினை சட்ட ரீதியாக எதிர்கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் அதில் இருந்து மீண்டு வருவார் என்றும், அவரை பதவி விலகச் சொல்பவர்கள் முன் உதாரணமாக இருந்துள்ளார்களா? என நினைத்து பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்..

ரஜினி உள்ளிட்டோர் மக்களின் நாடித்துடிப்பை பார்த்து அரசியலுக்கு வர வேண்டும். நாடி ஜோசியம் பார்க்கக்கூடாது என்றும், தினகரன் தனது நலனை முன்னிலைப்படுத்தியே செயல்படுகிறார். மக்கள் நலனில் அவர் அக்கறை கொள்ளவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்..

The eyes of the fringe of the mukkombu dam  damaged

அ.தி.மு.க.வுக்கு எதிரி தி.மு.க.வும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தான் என்றும், . ஜெயலலிதா மறைந்த பிறகு பல பிரச்சனைகளை சமாளித்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசு மீது பட்ட கண் திருஷ்டியால் தான் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்து போனதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios