கரும்பு , சர்க்கரையுடன் 1000 ரூபாய்...!! உடனே போங்க ரேஷன் கடைக்கு...!!!
பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் 13ம்தேதி பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமிழக அரசின் சார்பில் ஆயிரம் ரூபாய் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு , ரேஷன் கடைகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது . அதிமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்டது முதல் பொங்கல் பரிசுடன் ரொக்கம் பணமும் வழங்கப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த நவம்பர் மாதம் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் . குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி சர்க்கரை , கரும்பு 20 கிராம் , முந்திரி 20 கிராம் , உலர் திராட்சை , ஏலக்காய் 5 கிராம் , உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது . அத்துடன் 1000 ரூபாய் தொகையும் வழங்கப்படுகிறது . இந்த பொங்கல் பரிசு தொகுப்பை இன்று முதல் நியாயவிலைக் கடைகள் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது . இன்று முதல் இந்த பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படுகிறது.
வரும் 12ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் 13ம்தேதி பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அரசின் இந்த அறிவிப்பால் நியாயவிலைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது . பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.