தமிழக கேரள எல்லையை மூட முடிவு...!! கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு எடுத்த அதிரடி..!!
கேரளாவில் இந்த வைரசுக்கு இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புக்ள ஏதும் இல்லை. ஆனாலும் நோய் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தமிழக கேரள எல்லையை இன்றுமுதல் மூட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் . கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக கேரள எல்லையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது . சீனாவில் தோன்றிய காரணம் வைரஸ் சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது . இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உலகளவில் இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது .
இந்தியாவிலும் இந்த வைரஸ் தன் வேலையைக் காட்ட தொடங்கி உள்ளது. குறிப்பாக டெல்லி , மகாராஷ்டிரா , பஞ்சாப் , ராஜஸ்தான் , கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது . இந்தியாவில் இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது . சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் வைரஸ் அறிகுறிகள் அதிகமாக இருப்பதால் தமிழக-கேரள எல்லையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் இந்த வைரசுக்கு இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புக்ள ஏதும் இல்லை. ஆனாலும் நோய் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதனால் தமிழக-கேரள எல்லை மூடப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் . இது நோய் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது . அதேபோல் கேரளாவில் இருந்து வரும் அனைத்து விதமான வாகனங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 9 சோதனைச் சாவடிகள் இன்று மாலை முதல் மூடப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் .