Asianet News TamilAsianet News Tamil

க.அன்பழகனை வரிக்குவரி புகழ்ந்த சபாநாயகர் தனபால்..!! சட்டப்பேரவையில் நெகிழ்ச்சி...!!

பட்ஜெட் மீதான விவாதம் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது . இதில்  துறைவாரியான மானியக் கோரிக்கைகள் நடைபெறாத நிலையில் பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது .  

tamilnadu assembly speaker danapal condolence statement  for dmk general secretary k.anbalagan at assembly
Author
Chennai, First Published Mar 9, 2020, 12:51 PM IST

மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மொழி உரிமைக்காகப் போராடியவர் ,  ஜனநாயக முறைப்படி பேரவை நடைபெற உதவியவர் எளிமையின் உருவம் என தமிழக சபாநாயகர் தனபால் புகழாரம் சூட்டியுள்ளார் .  நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் இரண்டாவது அமர்வு இன்று காலை 10 மணிக்கு  கூடியது ,  இதில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது .   தமிழக அரசின் 2020-2001 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 14ஆம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 

tamilnadu assembly speaker danapal condolence statement  for dmk general secretary k.anbalagan at assembly

பட்ஜெட் மீதான விவாதம் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது . இதில்  துறைவாரியான மானியக் கோரிக்கைகள் நடைபெறாத நிலையில் பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது .  இந்நிலையில் இன்று முதல் ஏப்ரல்  9 தேதி வரை மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .  அதன்படி இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தில் இரண்டாவது அமர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது . கூட்டம் தொடங்கியதும் திமுக பொதுச்செயலாளர் மற்றும்  9 முறை எம்எல்ஏவாக இருந்தவருமான க. அன்பழகன் மற்றும் மறைந்த திமுக எம்எல்ஏக்கள் கேபிபி சாமி ,  காத்தவராயன் ,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. சந்திரன் , ஆகியோரின் மறைவுக்கு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் இரங்கல் செய்தி வாசித்தார் .  அப்போது கூறிய சபாநாயகர் தனபால் ,  க. ஆன்பழகனுக்கு புகழாரம் சூட்டினார் . அதில் , 

tamilnadu assembly speaker danapal condolence statement  for dmk general secretary k.anbalagan at assembly

அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை திறம்பட வகித்தவர் பேராசிரியர் க. அன்பழகன் ,  மொழி உரிமைக்காகப் போராடியவர் ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவை  நடைபெற உதவியவர் .  அவையில் எதிர்க்கட்சியினருக்கு ஏற்றவகையில் ஆணித்தரமாக வாதங்களை முன்வைத்து பேசியவர் . மக்கள் நலவாழ்வு  துறை ,  கல்வி மற்றும் நிதி அமைச்சராக திறம்பட பணியாற்றியவர் அன்பழகன் .   எளிமை ,  அடக்கம் ,  என எளிமையாக வாழ்ந்தவர் பேராசிரியர் அன்பழகன் .  அவரது  மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என அவர் கூறினார் .  மறைந்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றைய பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டதுடன்  அதில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
 

Follow Us:
Download App:
  • android
  • ios