12:20 PM IST
கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். இதில், அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
12:18 PM IST
Tamil Nadu Budget 2022 : தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது... எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சியில் மூலதன செலவுகளுக்காகவே நிதி செலவளிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் மூலதன செலவுகளுக்காகவே நிதி செலவளிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் ரூ.2.28 கோடி கடன் பெற உள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12:15 PM IST
Tamil Nadu Budget 2022 : 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட்டை வாசித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
12:14 PM IST
Tamil Nadu Budget 2022 :அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை போன்று புத்தக கண்காட்சி நடத்தப்படும். ரூ.5.6 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை போல புத்தக கண்காட்சி நடத்தப்படும். புதிதாக பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் மத்திய நூலகங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
12:09 PM IST
Tamil Nadu Budget 2022 : வானிலையை கணிக்க சூப்பர் கம்ப்யூட்டர்
வானிலையை துல்லியமாக கணிக்க சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட புதிய கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12:00 PM IST
Tamil Nadu Budget 2022 : பழமையான கோயில்களை போல, தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பழுது பார்க்க நிதி
பழமையான கோயில்களை போல, தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பழுது பார்க்க புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை வெஸ்லி தேவாலயம், நெல்லை கால்டுவெல் தேவாலயம், சென்னை நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஏர்வாடி மற்றும் நாகூர் தர்கா ஆகியவை புனரமைக்கப்படும்.
11:55 AM IST
Tamil Nadu Budget 2022 : ஆங்கிலத்திலும் பட்ஜெட் உரையாற்றிய நிதி அமைச்சர்
தேசிய, உலக அளவில் முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க பட்ஜெட்டின் சில முக்கிய குறிப்புகளை ஆங்கிலத்தில் உரையாற்றுகிறேன் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
11:52 AM IST
Tamil Nadu Budget 2022 : புதிய மாநகராட்சிகளுக்கு தலா ரூ.10 கோடி நிதி
காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க , தலா ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:50 AM IST
Tamil Nadu Budget 2022 : வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி
வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஓதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:44 AM IST
Tamil Nadu Budget 2022 : கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.79 கோடி நிதி உதவி
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.79 கோடி நிதி உதவி என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:42 AM IST
Tamil Nadu Budget 2022 : பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு
பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
11:41 AM IST
Tamil Nadu Budget 2022 : கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி
பழம்பெரும் கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
11:39 AM IST
Tamil Nadu Budget 2022 : மகளிர் இலவச பயணத்திற்கு ரூ.1520 கோடி நிதி ஒதுக்கீடு
மாநகராட்சி பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் செய்ய மானியமாக ரூ.1520 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:37 AM IST
Tamil Nadu Budget 2022 : சட்டமன்ற மேம்பாடு நிதியாக ரூ.705 கோடி ஒதுக்கீடு
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.705 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:36 AM IST
Tamil Nadu Budget 2022 : மின்சார பேருந்துகள் வாங்க ரூ.5,375 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் வாங்கவும், பேருந்துகளை நவீன மயமாக்கவும் ரூ.5375 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:33 AM IST
Tamil Nadu Budget 2022 : மின்பகிர்மான இழப்பீடுக்கு ரூ.13.108 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாவு மின்பகிர்மான இழப்பீடுகளை ஈடு செய்ய ரூ.13 ஆயிரத்து 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:28 AM IST
Tamil Nadu Budget 2022 : 6 வழிச்சாலையாக மாறும் ஈசிஆர்
கிழக்கு கடற்கரை சாலையை ரூ.135 கோடியில் 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:22 AM IST
Tamil Nadu Budget 2022 : சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:20 AM IST
Tamil Nadu Budget 2022 : பழங்குடியின மக்களுக்கு 443 வீடுகள் கட்ட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
விளிம்புநிலை பழங்குடியின மக்களுக்கு 443 வீடுகள் கட்ட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
11:16 AM IST
Tamil Nadu Budget 2022 : வங்கி கணக்கில் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000
அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
11:11 AM IST
Tamil Nadu Budget 2022 : வட சென்னையில் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக 10 கோடி ரூபாய் செலவில் வளாகம்
வட சென்னையில் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கைப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்டவைகளுக்காக சென்னை ஆர்.கே நகரில் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் செலவில் வளாகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
11:07 AM IST
Tamil Nadu Budget 2022 : மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி நிதி ஒதுக்கீடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்கள் நடந்த ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கீடு என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
11:01 AM IST
Tamil Nadu Budget 2022 : தாவர பூங்கா அமைக்க ரூ.300 கோடி
சென்னை அருகே தாவர பூங்கா அமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10:58 AM IST
Tamil Nadu Budget 2022 : தீயணைப்பு துறைக்கு ரூ.496.52 கோடி நிதி ஒதுக்கீடு
தீயணைப்புத்துறைக்கு ரூ.496.52 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:53 AM IST
Tamil Nadu Budget 2022 : நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:52 AM IST
Tamil Nadu Budget 2022 : காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டில் காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அறிவித்துள்ளார். அதேபோல், வனப்பகுதியில் வரையாடுகளை பாதுகாக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:50 AM IST
Tamil Nadu Budget 2022 : 18 ஆயிரம் வகுப்பறைகள்... ரூ.1300 கோடி ஒதுக்கீடு
புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும். அதற்காக ரூ.1300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:49 AM IST
Tamil Nadu Budget 2022 : இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
இல்லம் தேடிக் கல்வி திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:47 AM IST
Tamil Nadu Budget 2022 : பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளிகளை சீரமைக்க புதிய திட்டம்
பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளிகளை சீரமைக்க புதிய திட்டம். மறைந்த பேராசிரியர் அன்பழகன் பெயரில், ஆதிதிராவிடர் பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளின் தரத்தை உயர்த்த புதிய திட்டம் ரூ. 7 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
10:46 AM IST
Tamil Nadu Budget 2022 : சமூக வலைதள பொய் பரப்புரைகளை தடுக்க மையம்
சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும்.
10:43 AM IST
Tamil Nadu Budget 2022 : பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
10:41 AM IST
காவிரி பாசன அமைப்புகளை புனரமைக்க ரூ.3,384 கோடி ஒதுக்கீடு
நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:39 AM IST
தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம்
தனியார் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படும்.
10:38 AM IST
ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4816 கோடி ஒதுக்கீடு
முதியோர் ஓய்வோதிய திட்டம், மாற்றத்திறனாளிகள் ஓய்வதியம் உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4816 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:33 AM IST
அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாட புத்தகங்கள்
அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
10:31 AM IST
சென்னை வெள்ளத் தடுப்புக்கு முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு
சென்னை வெள்ளப்பகுதிகளை தடுக்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி ரூ1000 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்த ஆண்டு அதற்காக முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:30 AM IST
தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் நடத்தப்படும்
தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் நடத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் தகவல் தெரிவித்துள்ளார்.
10:29 AM IST
ஜிஎஸ்டி இழப்பீடு 20 ஆயிரம் கோடி
பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் ரூ.5 கோடியில் வெளியிடப்படும். ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை அமலுக்கு வந்த பின் தமிழ்நாடு 20 ஆயிரம் கோடி வரி இழப்பை சந்திக்கப்பட்டுள்ளது.
10:26 AM IST
தமிழ் சமுதாயத்தை வெற்றிகரமாக வழிநடத்தும் திமுக
தமிழ் சமுதாயத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய கடமை திமுக அரசுக்கு உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
10:23 AM IST
வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்
வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றினார். மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.
10:22 AM IST
முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி ரெய்டுக்கு கண்டனம்
தமிழக பட்ஜெட் உரையின் மீது எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர், முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதற்கும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்ததற்கும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
10:20 AM IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சரின் செயல்பாட்டுக்கு அங்கீகாரம். மாநில அரசின் உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும் என தெரிவித்துள்ளார்.
10:19 AM IST
பன்முகத்தன்மையை அழிக்கும் பாசிச சக்திகள்.. பிடிஆர் குற்றச்சாட்டு
தமிழக பட்ஜெட் உரையின் போது பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ‛நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் பாசிச சக்திகள்’ என பாஜகவை மறைமுகமாக சாடினார்.
10:16 AM IST
தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை இம்முறை ரூ.7000 கோடி
8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
10:15 AM IST
நிதிப்பாற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைவு
தமிழக அரசின் நிதிப்பாற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
10:13 AM IST
முதல்வராக இருந்த உங்களுக்கு தெரியாதா? எடப்பாடி பழனிசாமியை கண்டித்த சபாநாயகர்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி வழங்க கோரிக்கை வைத்தார். சபாநாயகர் நிராகரித்ததால் அவையில் அதிமுகவினர் கூச்சல் எழுப்பி வருகின்றனர். முதலமைச்சராக இருந்த உங்களுக்கு, இன்று நிதிநிலை அறிக்கை மட்டும் படிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியும்; தெரிந்தே பேச வேண்டும் என கூச்சல் போடுகிறீர்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் பதிலளித்துள்ளார்.
10:06 AM IST
சட்டப்பேரவையில் அதிமுக அமளி
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பு கேட்டு குரல் எழுப்பி வருகிறார்.
10:03 AM IST
தமிழக பட்ஜெட் தாக்கலானது
பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டது.
9:53 AM IST
தமிழக பட்ஜெட்.. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை நிறைவேற்றப்படுமா?
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் சில அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை, மாத மின கட்டணம் செலுத்தும் திட்டம் குறித்து எதிர்பார்க்கப்படுகிறது.
12:20 PM IST:
பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். இதில், அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
12:18 PM IST:
அதிமுக ஆட்சியில் மூலதன செலவுகளுக்காகவே நிதி செலவளிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் மூலதன செலவுகளுக்காகவே நிதி செலவளிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் ரூ.2.28 கோடி கடன் பெற உள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12:15 PM IST:
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
12:14 PM IST:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை போன்று புத்தக கண்காட்சி நடத்தப்படும். ரூ.5.6 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை போல புத்தக கண்காட்சி நடத்தப்படும். புதிதாக பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் மத்திய நூலகங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
12:09 PM IST:
வானிலையை துல்லியமாக கணிக்க சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட புதிய கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12:00 PM IST:
பழமையான கோயில்களை போல, தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பழுது பார்க்க புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை வெஸ்லி தேவாலயம், நெல்லை கால்டுவெல் தேவாலயம், சென்னை நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஏர்வாடி மற்றும் நாகூர் தர்கா ஆகியவை புனரமைக்கப்படும்.
11:55 AM IST:
தேசிய, உலக அளவில் முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க பட்ஜெட்டின் சில முக்கிய குறிப்புகளை ஆங்கிலத்தில் உரையாற்றுகிறேன் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
11:15 PM IST:
காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க , தலா ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:50 AM IST:
வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஓதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:46 AM IST:
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.79 கோடி நிதி உதவி என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:42 AM IST:
பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
11:41 AM IST:
பழம்பெரும் கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
11:40 AM IST:
மாநகராட்சி பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் செய்ய மானியமாக ரூ.1520 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:37 AM IST:
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.705 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:36 AM IST:
தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் வாங்கவும், பேருந்துகளை நவீன மயமாக்கவும் ரூ.5375 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:33 AM IST:
தமிழ்நாவு மின்பகிர்மான இழப்பீடுகளை ஈடு செய்ய ரூ.13 ஆயிரத்து 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:29 AM IST:
கிழக்கு கடற்கரை சாலையை ரூ.135 கோடியில் 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:23 AM IST:
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:20 AM IST:
விளிம்புநிலை பழங்குடியின மக்களுக்கு 443 வீடுகள் கட்ட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
11:17 AM IST:
அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
11:11 AM IST:
வட சென்னையில் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கைப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்டவைகளுக்காக சென்னை ஆர்.கே நகரில் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் செலவில் வளாகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
11:07 AM IST:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்கள் நடந்த ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கீடு என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
11:01 AM IST:
சென்னை அருகே தாவர பூங்கா அமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10:59 AM IST:
தீயணைப்புத்துறைக்கு ரூ.496.52 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:54 AM IST:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:52 AM IST:
தமிழக பட்ஜெட்டில் காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அறிவித்துள்ளார். அதேபோல், வனப்பகுதியில் வரையாடுகளை பாதுகாக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:50 AM IST:
புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும். அதற்காக ரூ.1300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:49 AM IST:
இல்லம் தேடிக் கல்வி திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:47 AM IST:
பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளிகளை சீரமைக்க புதிய திட்டம். மறைந்த பேராசிரியர் அன்பழகன் பெயரில், ஆதிதிராவிடர் பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளின் தரத்தை உயர்த்த புதிய திட்டம் ரூ. 7 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
10:46 AM IST:
சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும்.
10:43 AM IST:
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
10:41 AM IST:
நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:39 AM IST:
தனியார் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படும்.
10:39 AM IST:
முதியோர் ஓய்வோதிய திட்டம், மாற்றத்திறனாளிகள் ஓய்வதியம் உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4816 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:33 AM IST:
அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
10:32 AM IST:
சென்னை வெள்ளப்பகுதிகளை தடுக்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி ரூ1000 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்த ஆண்டு அதற்காக முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:31 AM IST:
தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் நடத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் தகவல் தெரிவித்துள்ளார்.
10:29 AM IST:
பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் ரூ.5 கோடியில் வெளியிடப்படும். ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை அமலுக்கு வந்த பின் தமிழ்நாடு 20 ஆயிரம் கோடி வரி இழப்பை சந்திக்கப்பட்டுள்ளது.
10:26 AM IST:
தமிழ் சமுதாயத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய கடமை திமுக அரசுக்கு உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
10:23 AM IST:
வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றினார். மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.
10:22 AM IST:
தமிழக பட்ஜெட் உரையின் மீது எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர், முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதற்கும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்ததற்கும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
10:20 AM IST:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சரின் செயல்பாட்டுக்கு அங்கீகாரம். மாநில அரசின் உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும் என தெரிவித்துள்ளார்.
10:19 AM IST:
தமிழக பட்ஜெட் உரையின் போது பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ‛நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் பாசிச சக்திகள்’ என பாஜகவை மறைமுகமாக சாடினார்.
10:16 AM IST:
8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
10:15 AM IST:
தமிழக அரசின் நிதிப்பாற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
10:13 AM IST:
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி வழங்க கோரிக்கை வைத்தார். சபாநாயகர் நிராகரித்ததால் அவையில் அதிமுகவினர் கூச்சல் எழுப்பி வருகின்றனர். முதலமைச்சராக இருந்த உங்களுக்கு, இன்று நிதிநிலை அறிக்கை மட்டும் படிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியும்; தெரிந்தே பேச வேண்டும் என கூச்சல் போடுகிறீர்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் பதிலளித்துள்ளார்.
10:06 AM IST:
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பு கேட்டு குரல் எழுப்பி வருகிறார்.
10:03 AM IST:
பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டது.
9:55 AM IST:
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் சில அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை, மாத மின கட்டணம் செலுத்தும் திட்டம் குறித்து எதிர்பார்க்கப்படுகிறது.