5:19 PM IST
ஒண்ணுக்கும் உதவாத பட்ஜெட்... அதிமுகவை அதிர வைத்த விஜயகாந்த்
ஒண்ணுக்கும் உதவாத பட்ஜெட்... அதிமுகவை அதிர வைத்த விஜயகாந்த்
4:58 PM IST
கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான நிதி உயர்வு
கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்வு
4:38 PM IST
பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது...மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
4:20 PM IST
அரசு ஊழியர்களுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தரப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4:03 PM IST
மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையை இணைக்கும் வகையில் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் துவக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
3:48 PM IST
விவசாயிகளின் பயிர்க்கடன்
தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் பயிர்க்கடனுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
3:23 PM IST
மசூதிகளின் பராமரிப்பு
மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
3:06 PM IST
தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணி
கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 கோடியில் இருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
2:45 PM IST
ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி
ஆதிதிராவிட் முன்னேற்றத்திற்காக ரூ.4,109 கோடியும் ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்கு ரூ.2,018 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1:18 PM IST
நிறைவடைந்தது பட்ஜெட் தாக்கல்..!
தமிழக பட்ஜெட் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது.
1:16 PM IST
ஏரி, குளங்கள் சீரமைப்பு..
தமிழகத்தில் இருக்கும் 906 குளங்கள், 183 அணைக்கட்டுகளை சீரமைத்தல் மற்றும் 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் அமைக்க ரூ.649 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1:10 PM IST
பிரதமர் நகர்புற திட்டம்
பிரதமர் நகர்புற திட்டத்தின் கீழ் 1,12,876 தனி வீடுகளும் 65,290 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12:58 PM IST
வேளாண் பதப்படுத்தப்படும் மண்டலங்கள்
8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தப்படும் மண்டலங்கள் அமைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12:55 PM IST
அம்ருத் திட்டம்
அம்ருத் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.1,450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
12:50 PM IST
ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் திட்டம்
சென்னை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் திட்டம் தயாரிக்கப்பட இருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12:40 PM IST
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 1033 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
12:32 PM IST
மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளைஞர் நலன்..!
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடியும் இளைஞர் நலனுக்காக ரூ.218 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
12:26 PM IST
விபத்து இழப்பீடு..!
விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.
12:25 PM IST
ஏழைக்குடும்பங்களுக்கு காப்பீடு
ஏழைக் குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.யுடன் இணைந்து விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
12:21 PM IST
ஸ்மார்ட் ரேசன் கார்டு..!
ஸ்மார்ட் ரேசன் கார்டு இருந்தால் எந்த கடையிலும் பொருட்களை வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
12:19 PM IST
அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம்..!
அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தில் 2020-21ம் ஆண்டுக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
12:16 PM IST
முதியோர் ஆதரவு இல்லங்கள்..!
தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12:14 PM IST
சென்னை வெள்ளம்..!
சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12:05 PM IST
இந்து சமய அறநிலையத்துறை..!
கோவில்கள் மேம்பாட்டிற்காக இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடு ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
11:59 AM IST
பள்ளிக்குழந்தைகள் நலன்..!
பள்ளி குழந்தைகளின் நலனுக்கான மதிய உணவு திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.5,935 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
11:56 AM IST
சீரமைப்பில் அம்மா உணவகம்..!
அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக பட்ஜெட்டில் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:54 AM IST
தொழில்துறைக்கு முக்கியத்துவம்..!
தமிழக பட்ஜெட்டில் தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
11:52 AM IST
புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு..!
புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் நிறுவுவற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:19 AM IST
பல்வேறு மாவட்டங்களுக்கான விவசாய திட்டங்கள்
கடலூரில் முந்திரி மையம், பெரம்பலூரில் வெங்காய மையம், தேனியில் முருங்கை மையம், ஈரோட்டில் மஞ்சள் மையம், தென்காசியில் எலுமிச்சை மையம் மற்றும் தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
11:03 AM IST
வேளாண் துறைக்கான அறிவிப்புகளும் நிதி ஒதுக்கீடுகளும்
வேளாண் துறைக்கு ரூ.11,894 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
1. விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.11,000 கோடி வழங்கப்படும்.
2. 1,364 நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3. கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4. நீர்ப்பாசன திட்டத்திற்காக மொத்தம் ரூ.6991 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
11:01 AM IST
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கான நிதி
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
10:57 AM IST
13 இடங்களில் அரசு மகளிர் விடுதி
பணிபுரியும் மகளிர்களுக்காக அரசு சார்பில் சென்னையில் 8 மகளிர் விடுதிகள் மற்றும் திருச்சி, ஓசூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய இடங்களில் அரசு மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
10:54 AM IST
கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம்
ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
10:50 AM IST
கடலூரில் அரசு மருத்துவ கல்லூரி
அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்தும். இனிமேல் அந்த மருத்துவ கல்லூரி கடலூர் அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படு
10:42 AM IST
புதிய சிப்காட்டுகள்
தொழில்துறைக்கு ரூ.2,500 கோடியை ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையம் மற்றும் உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அறிவிப்பு.
10:40 AM IST
புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா
ஆட்சேபணையில்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வரும் ஆகஸ்ட்டுக்குள் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் - பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு
10:38 AM IST
பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்பு
பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு ரூ.75.02 கோடி ஒதுக்கீடு
10:33 AM IST
மீனவர்களுக்கான பிரத்யேக அறிவிப்பு
ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை தொடர்புகொள்ள, இஸ்ரோ உருவாக்கிய டிரான்ஸ்பாண்டர்கள் படகுகளில் பொருத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பி.எஸ் அறிவித்தார்.
10:30 AM IST
அரசுப் பேருந்துகளில் கேமரா
அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கேமரா பொருத்தப்படும் - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு
10:29 AM IST
மீன்வளத் துறைக்கான நிதி
மீன்வளத் துறைக்கு ரூ.1,229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
10:28 AM IST
மின்சாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு
மின்சாரத் துறைக்கு ரூ.20,115.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
10:26 AM IST
சுகாதாரத் துறைக்கான நிதி
தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
10:23 AM IST
உயர்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு
உயர்கல்வித் துறைக்கு ரூ.5,052 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
10:18 AM IST
பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.34,181 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
10:07 AM IST
உணவு மானியத்திற்கு நிதி ஒதுக்கீடு..!
உணவு மானியத்திற்காக 6500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10:06 AM IST
10 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓ.பி.எஸ்..!
தமிழ்நாடு அரசின் நிதியமைச்சராக பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 10 வது பட்ஜெட் இதுவாகும்.
10:04 AM IST
தொடங்கியது பட்ஜெட் தாக்கல்..!
இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர் செல்வம் தற்போது தாக்கல் செய்ய தொடங்கியுள்ளார்.
10:03 AM IST
பேரவை வந்தார் ஓ.பி.எஸ்..!
தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய துணை முதல்வரும் நிதி அமைச்சருமான பன்னீர் செல்வம் தலைமை செயலகத்திற்கு வருகை தந்தார்.
9:57 AM IST
சற்றுநேரத்தில் தமிழக பட்ஜெட்..!
தமிழக அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் சில நிமிடங்களில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
5:19 PM IST:
ஒண்ணுக்கும் உதவாத பட்ஜெட்... அதிமுகவை அதிர வைத்த விஜயகாந்த்
4:58 PM IST:
கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்வு
4:39 PM IST:
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
4:20 PM IST:
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தரப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4:03 PM IST:
சென்னையை இணைக்கும் வகையில் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் துவக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
3:48 PM IST:
தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் பயிர்க்கடனுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
3:23 PM IST:
மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
3:07 PM IST:
கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 கோடியில் இருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
2:45 PM IST:
ஆதிதிராவிட் முன்னேற்றத்திற்காக ரூ.4,109 கோடியும் ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்கு ரூ.2,018 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1:18 PM IST:
தமிழக பட்ஜெட் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது.
1:17 PM IST:
தமிழகத்தில் இருக்கும் 906 குளங்கள், 183 அணைக்கட்டுகளை சீரமைத்தல் மற்றும் 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் அமைக்க ரூ.649 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1:10 PM IST:
பிரதமர் நகர்புற திட்டத்தின் கீழ் 1,12,876 தனி வீடுகளும் 65,290 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12:58 PM IST:
8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தப்படும் மண்டலங்கள் அமைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12:56 PM IST:
அம்ருத் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.1,450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
12:50 PM IST:
சென்னை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் திட்டம் தயாரிக்கப்பட இருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12:41 PM IST:
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 1033 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
12:32 PM IST:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடியும் இளைஞர் நலனுக்காக ரூ.218 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
12:27 PM IST:
விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.
12:25 PM IST:
ஏழைக் குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.யுடன் இணைந்து விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
12:22 PM IST:
ஸ்மார்ட் ரேசன் கார்டு இருந்தால் எந்த கடையிலும் பொருட்களை வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
12:19 PM IST:
அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தில் 2020-21ம் ஆண்டுக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
12:16 PM IST:
தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12:14 PM IST:
சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12:06 PM IST:
கோவில்கள் மேம்பாட்டிற்காக இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடு ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
11:59 AM IST:
பள்ளி குழந்தைகளின் நலனுக்கான மதிய உணவு திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.5,935 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
11:56 AM IST:
அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக பட்ஜெட்டில் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:54 AM IST:
தமிழக பட்ஜெட்டில் தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
11:53 AM IST:
புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் நிறுவுவற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:21 AM IST:
கடலூரில் முந்திரி மையம், பெரம்பலூரில் வெங்காய மையம், தேனியில் முருங்கை மையம், ஈரோட்டில் மஞ்சள் மையம், தென்காசியில் எலுமிச்சை மையம் மற்றும் தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
11:24 AM IST:
வேளாண் துறைக்கு ரூ.11,894 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
1. விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.11,000 கோடி வழங்கப்படும்.
2. 1,364 நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3. கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4. நீர்ப்பாசன திட்டத்திற்காக மொத்தம் ரூ.6991 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
11:03 AM IST:
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
11:01 AM IST:
பணிபுரியும் மகளிர்களுக்காக அரசு சார்பில் சென்னையில் 8 மகளிர் விடுதிகள் மற்றும் திருச்சி, ஓசூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய இடங்களில் அரசு மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
10:54 AM IST:
ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
10:50 AM IST:
அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்தும். இனிமேல் அந்த மருத்துவ கல்லூரி கடலூர் அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படு
10:43 AM IST:
தொழில்துறைக்கு ரூ.2,500 கோடியை ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையம் மற்றும் உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அறிவிப்பு.
10:41 AM IST:
ஆட்சேபணையில்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வரும் ஆகஸ்ட்டுக்குள் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் - பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு
10:39 AM IST:
பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு ரூ.75.02 கோடி ஒதுக்கீடு
10:34 AM IST:
ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை தொடர்புகொள்ள, இஸ்ரோ உருவாக்கிய டிரான்ஸ்பாண்டர்கள் படகுகளில் பொருத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பி.எஸ் அறிவித்தார்.
10:31 AM IST:
அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கேமரா பொருத்தப்படும் - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு
10:30 AM IST:
மீன்வளத் துறைக்கு ரூ.1,229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
10:28 AM IST:
மின்சாரத் துறைக்கு ரூ.20,115.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
10:26 AM IST:
தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
10:24 AM IST:
உயர்கல்வித் துறைக்கு ரூ.5,052 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
10:20 AM IST:
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.34,181 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
10:08 AM IST:
உணவு மானியத்திற்காக 6500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10:06 AM IST:
தமிழ்நாடு அரசின் நிதியமைச்சராக பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 10 வது பட்ஜெட் இதுவாகும்.
10:04 AM IST:
இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர் செல்வம் தற்போது தாக்கல் செய்ய தொடங்கியுள்ளார்.
10:03 AM IST:
தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய துணை முதல்வரும் நிதி அமைச்சருமான பன்னீர் செல்வம் தலைமை செயலகத்திற்கு வருகை தந்தார்.
9:57 AM IST:
தமிழக அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் சில நிமிடங்களில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.