Asianet News TamilAsianet News Tamil

தன் ரசிகர்களையே அவமானப்படுத்திய ரஜினி..!! கிழி கிழியென கிழித்து தொங்கவிட்ட தி . வேல்முருகன்..!!

இந்நிலையில்  இதை சுட்டிக்காட்டிய தி. வேல்முருகன் பல லட்சக்கணக்கான மக்களின் மனங்களைக் கவர்ந்த கருணாநிதி தன்னுடைய 93 ஆவது வயதிலும்  நீதிமன்றம் சென்றபோது ,  ஒரு நடிகர் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்பது ,  அபத்தமானது .  ஏற்றுக்கொள்ள முடியாதது . 

T. velmurugan badly criticized actor rajiniganth regarding tutucorin case appearing
Author
Chennai, First Published Feb 25, 2020, 2:52 PM IST

தம்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகாக 93 வயதிலும் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜரானார் ,  ஆனால் நடிகர் ரஜினிகாந்த் வழக்கில் ஆஜராக மறுத்து ஓடி ஒளிகிறார் என தி.வேல்முருகன் ரஜினிகாந்தை குற்றம்சாட்டியுள்ளார் .  ரஜினியின் இந்த  நடவடிக்கை அவரது ரசிகர்களை அவமதிக்கும் செயல் எனவும் வேல்முருகன் சுட்டிக்காட்டியுள்ளார் .  திமுக தலைவர் மு.க ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி வேல்முருகன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார் ,  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார் . தொடர்ந்து பேசிய அவர் . 

T. velmurugan badly criticized actor rajiniganth regarding tutucorin case appearing

 தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கேட்டு நடிகர் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார்,   தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் ,  இந்நிலையில்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சில சமூக விரோதிகள் காரணம். போலீஸை மட்டும் குறை கூறுவது தவறு என ரஜினி பேட்டியளித்திருந்தார் .  இதையடுத்து இந்த வழக்கில் ஆஜராகுமாறு ரஜினிகாந்துக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது . இந்நிலையில் வழக்கில்  நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ரஜினி மனு தாக்கல் செய்திருந்தார் . 

T. velmurugan badly criticized actor rajiniganth regarding tutucorin case appearing

இந்நிலையில்  இதை சுட்டிக்காட்டிய தி. வேல்முருகன் பல லட்சக்கணக்கான மக்களின் மனங்களைக் கவர்ந்த கருணாநிதி தன்னுடைய 93 ஆவது வயதிலும்  நீதிமன்றம் சென்றபோது ,  ஒரு நடிகர் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்பது ,  அபத்தமானது .  ஏற்றுக்கொள்ள முடியாதது .  ஆஜராக முடியாது என்பதற்கு அவர் கூறிய காரணம் அவருடைய ரசிகர்களை அவமானப்படுத்தும் ,  அசிங்கப்படுத்தும் செயல் என வேல்முருகன் கூறினார் .  கடந்த 2016ம் தன் மீது  தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் விளக்கமளித்த திமுக தலைவராக இருந்த கருணாநிதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தார் . ஆனால்  நடிகர்  ரஜினிகாந்த் தான் நேரில் ஆஜரானால்  சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் எனவே நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது . 
 

Follow Us:
Download App:
  • android
  • ios