தன் ரசிகர்களையே அவமானப்படுத்திய ரஜினி..!! கிழி கிழியென கிழித்து தொங்கவிட்ட தி . வேல்முருகன்..!!
இந்நிலையில் இதை சுட்டிக்காட்டிய தி. வேல்முருகன் பல லட்சக்கணக்கான மக்களின் மனங்களைக் கவர்ந்த கருணாநிதி தன்னுடைய 93 ஆவது வயதிலும் நீதிமன்றம் சென்றபோது , ஒரு நடிகர் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்பது , அபத்தமானது . ஏற்றுக்கொள்ள முடியாதது .
தம்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகாக 93 வயதிலும் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜரானார் , ஆனால் நடிகர் ரஜினிகாந்த் வழக்கில் ஆஜராக மறுத்து ஓடி ஒளிகிறார் என தி.வேல்முருகன் ரஜினிகாந்தை குற்றம்சாட்டியுள்ளார் . ரஜினியின் இந்த நடவடிக்கை அவரது ரசிகர்களை அவமதிக்கும் செயல் எனவும் வேல்முருகன் சுட்டிக்காட்டியுள்ளார் . திமுக தலைவர் மு.க ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி வேல்முருகன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார் , பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார் . தொடர்ந்து பேசிய அவர் .
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கேட்டு நடிகர் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் , இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சில சமூக விரோதிகள் காரணம். போலீஸை மட்டும் குறை கூறுவது தவறு என ரஜினி பேட்டியளித்திருந்தார் . இதையடுத்து இந்த வழக்கில் ஆஜராகுமாறு ரஜினிகாந்துக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது . இந்நிலையில் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ரஜினி மனு தாக்கல் செய்திருந்தார் .
இந்நிலையில் இதை சுட்டிக்காட்டிய தி. வேல்முருகன் பல லட்சக்கணக்கான மக்களின் மனங்களைக் கவர்ந்த கருணாநிதி தன்னுடைய 93 ஆவது வயதிலும் நீதிமன்றம் சென்றபோது , ஒரு நடிகர் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்பது , அபத்தமானது . ஏற்றுக்கொள்ள முடியாதது . ஆஜராக முடியாது என்பதற்கு அவர் கூறிய காரணம் அவருடைய ரசிகர்களை அவமானப்படுத்தும் , அசிங்கப்படுத்தும் செயல் என வேல்முருகன் கூறினார் . கடந்த 2016ம் தன் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் விளக்கமளித்த திமுக தலைவராக இருந்த கருணாநிதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தார் . ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தான் நேரில் ஆஜரானால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் எனவே நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .