ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதலமைச்சாராக மக்கள் வாக்களிக்கவில்லை என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற சசிகலா, அடுத்து முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில்செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முக.ஸ்டாலின், ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதலமைச்சாராக மக்கள் வாக்களிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலைகளை திமுக உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எந்த ஒரு முடிவையும் ஜனநாயக விதிகளுக்குட்பட்டே திமுக எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், ஸ்டாலின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.