Asianet News TamilAsianet News Tamil

உள்ளாட்சித் தேர்தல் மட்டும் ஒழுங்கா நடந்திருந்துச்சுன்னா !! நாங்கதான் ஜெயிச்சிருப்போம் !! அதிரடி ஸ்டாலின் !!

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.மு.க. பெற்று இருக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

slanin speech in pongal festivel
Author
Kanchipuram, First Published Jan 16, 2020, 9:56 AM IST

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. கழகத்தின் சார்பில் வல்லக்கோட்டை பகுதியில்திமுக கட்சியின் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தனது மனைவியுடன் வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.

slanin speech in pongal festivel

விழாவில் பெண்கள் அனைவரும் பாரம்பரிய உடை சேலை அணிந்து கொண்டு சமத்துவ பொங்கலை மிக சிறப்பாக கொண்டாடினர். 

slanin speech in pongal festivel

தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் விதத்தில் மயில் ஆட்டம், ஒயிலாட்டம், இசைக்கச்சேரி, கிராமியபாடல் மற்றும் கோலாட்டம், குதிரை ஆட்டம் போன்ற சிறப்பான ஆட்டங்கள் நடைபெற்றன.

slanin speech in pongal festivel

பின்னர் பொங்கல் விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றும் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை திமுக பெற்று இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios