டி.டி.வி.தினகரனை விட்டு வெளியேறியதற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டு முக்கியமான காரணங்களை கூறியுள்ளார். அது என்னென்ன என்பது குறித்து  பார்க்கலாம்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர்ஸ்டாலின்முன்னிலையில், அதிமுக முன்னாள்அமைச்சரும், கரூர்மாவட்ட, அமமுகசெயலருமான, செந்தில்பாலாஜி, திமுகவில் இணைந்தார்.

இணைப்புக்குபின்செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி , ஸ்டாலின்மீதானஈர்ப்பில், அடிப்படைஉறுப்பினராக, திமுகவில்,தன்னைஇணைத்துக்கொண்டதாகவும், தொண்டர்களைஅரவணைத்துசெல்லக்கூடியதலைவராக, ஸ்டாலின்இருக்கிறார் என்றும் புகழ்ந்தார்..

திமுகவுக்குத்தாவிய, முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜிக்கு, கரூர் அதிமுக சார்பில், வழியனுப்புஊர்வலம்நடந்தது. அதில், பட்டாசுவெடித்து, பொதுமக்களுக்குஇனிப்புவழங்கிய, அதிமுகவினர், குக்கரைபோட்டுஉடைத்தனர். ஐந்தாவதுமுறையாக, கட்சிமாறுபவருக்குவழியனுப்புவிழா… தொடரட்டும்உங்கள்கட்சித்தாவல்… எட்டட்டும்கின்னஸ்சாதனை… ' என, எழுதப்பட்டிருந்தஅட்டைகளை அவர்கள் ஊடாவலத்தில் கொண்டு சென்றனர்.

ஆனால் அமமுகமூத்தநிர்வாகிகள்பலர், தன்னுடன், திமுகவுக்குவராமல்புறக்கணித்ததால், செந்தில்பாலாஜிகடும்அதிர்ச்சிஅடைந்துள்ளார். தினகரன், அமமுகவைத்தொடங்கியபோது, செந்தில்பாலாஜியுடன், ஏராளமான, அதிமுகநிர்வாகிகளும், அக்கட்சியில்இணைந்தனர். ஆனால், நேற்றுஅவர் திமுகவில்இணைந்தபோது, சிலர்மட்டுமேசென்றுள்ளனர்.

அமமுகசார்பில், மண்டலவாரியாகநடந்தபொதுக்கூட்டம், மாவட்டவாரியாகநடந்தஆர்ப்பாட்டம்மற்றும்ஆர்.கே.நகர்தொகுதிஇடைத்தேர்தல் என செந்தில்பாலாஜி, கோடிக்கணக்கில்செலவுசெய்துஉள்ளார்.

காலியாகஉள்ள, 20 தொகுதிகளுக்குஇடைத்தேர்தல்அறிவிக்கப்பட்டால், 10 தொகுதிகளுக்கான, தேர்தல்செலவைஏற்கும்படி, செந்தில்பாலாஜிக்கு, தினகரன்தரப்பில்கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தினகரனுக்காகவும், கட்சிக்காகவும், செந்தில் பாலாஜ நிறையசெலவுசெய்துநொந்துபோயிருந்தவர், இதனால்கடும்அதிருப்திஅடைந்தாக கூறப்படுகிறது.


இதனிடையே பெங்களூருசிறையில்இருக்கும்சசிகலாவைசந்திக்கவும், செந்தில்பாலாஜிக்குஅனுமதிமறுக்கப்பட்டுஉள்ளது. ஒருகுறிப்பிட்டசமுதாயத்தைசேர்ந்தவர்களுக்குமட்டும், அமமுகவில்முக்கியத்துவம்தரப்படுவதாக, குற்றச்சாட்டுஉள்ளது.

இதனால், அதிகம்பாதிக்கப்பட்டவர், செந்தில்பாலாஜி. எனவே, இனியும்தினகரனுடன்இணைந்துபணியாற்றினால், இருக்கிறசொத்துக்களையும்விற்றுவிட்டு, நடுத்தெருவுக்குவரவேண்டியநிலைஏற்படும்என, செந்தில்பாலாஜிநம்பினார்.

தொடர்ந்து, பணம்செலவுசெய்ய, செந்தில்பாலாஜிக்குஅழுத்தம்கொடுத்ததுதான், அவர்பிரிவதற்குமுக்கிய காரணமாகஅமைந்துள்ளது என விவரம் அறிந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.