தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், புதிய கணக்கை தொடங்கிய சீமான் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நாம் கட்சி நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்கு இன்று முடக்கப்பட்டது. அதே போல் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளும் இன்று முடக்கப்பட்டது. சட்ட ரீதியாக வந்த கோரிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் சீமான் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளை முடக்க கோரிக்கை விடுக்கவில்லை என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க : கர்நாடகாவுக்கு சென்று மேகதாது அணைக்கு எதிராக எதிர்த்து பேசியவன் நான்.. அண்ணாமலை சரவெடி..!

இதற்கு நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கண்க்கு முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “நாம்தமிழர்கட்சியின்தலைமைஒருங்கிணைப்பாளர்திரு. சீமான், மே 17 இயக்கஒருங்கிணைப்பாளர்சகோதரர்திரு. திருமுருகன்காந்திஉள்ளிட்டோரதுட்விட்டர்கணக்குகள்இந்தியாவில்முடக்கப்பட்டிருப்பதுகண்டனத்திற்குரியது. கருத்துகளைகருத்துகளால்எதிர்கொள்வதேஅறம். கழுத்தைநெரிப்பதுஅல்ல. ட்விட்டர்முடக்கத்தைவிலக்கிச்சமூகவலைத்தளத்தைஅதற்கானதரத்துடன்செயல்படஅனுமதிக்கவேண்டும்!என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதனை தொடர்ந்து சீமான் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கி உள்ளார். செந்தமிழன் சீமான் என்ற பெயரில் ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கி உள்ள சீமான், தனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சீமானின் பதிவில் “ புதிய நாடாளுமன்றத்தை செங்கோல் நாட்டி திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து குரல்வளையை நெறிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் கொடுங்கோன்மை செயல் வெட்கக்கேடானது.

கருத்தினைக்கருத்தால்எதிர்கொள்ளத்திராணியற்று, எங்களதுகீச்சகத்தைமுடக்கிகருத்துசுதந்திரத்தைஒடுக்கும்அடக்குமுறையைக்கண்டித்துதனதுவலிமையானக்கருத்தைப்பதிவுசெய்து, துணைநிற்கும்மாண்புமிகுதமிழ்நாட்டுமுதலமைச்சர்மு.. ஸ்டாலினுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்

Scroll to load tweet…

இதையும் படிங்க : தமிழ்நாட்டு மக்கள் மீது கோபமோ,வெறுப்போ இல்லை.! மேகதாதுவால் இரு மாநில மக்களும் பயன் அடைவார்கள்-டிகே சிவக்குமார்