உதயநிதியும் கமல்ஹாசனும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டார்கள். 20 சீட் கொடுப்பதாக தி.மு.க.வில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் தமிழகம் முழுக்கவே பேச்சாக இருக்கிறது. 

உதயநிதியும் கமல்ஹாசனும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டார்கள். 20 சீட் கொடுப்பதாக தி.மு.க.வில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் தமிழகம் முழுக்கவே பேச்சாக இருக்கிறது. ஆனால், அப்படியொரு பேச்சுவார்த்தை நடக்கவே இல்லை என்று உறுதியுடன் தெரிவிக்கிறார் மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ்.

இதுகுறித்துப் பேசும் முரளி அப்பாஸ், ‘இந்த நான்கு நாள் பிரச்சாரத்தில், நான் முதலமைச்சராவதற்கு வாய்ப்பு அளியுங்கள் என்று கமல் கேட்கிறார். மக்கள் நீதி மலரும்போது குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள் என்கிறார். என்னென்ன செயல்கள் செய்வேன் என்கிறார். இதனையெல்லாம் உதயநிதியோ, திமுகவோ ஒத்துக்கொள்ளும் என்று நினைத்தால் குழந்தைத்தனம்.