Asianet News TamilAsianet News Tamil

ஜெ.நினைவிடத்தில் கண்ணீர் விட்டு கதறிய சசிகலா... மீண்டும் போட்ட சபதம்..!

அவ்வப்போது தனது கண்ணீரை கர்சீப்பால் துடைத்துக் கொண்டார். 
 

Sasikala shed tears at the memory of J. ... vow again ..!
Author
Tamil Nadu, First Published Oct 16, 2021, 12:02 PM IST

மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு, அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் வி.கே.சசிகலா வந்தடைந்தார். ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களில் கண்ணீர் மல்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவ்வப்போது தனது கண்ணீரை கர்சீப்பால் துடைத்துக் கொண்டார். Sasikala shed tears at the memory of J. ... vow again ..!

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த மெரினாவுக்கு புறப்பட்டார்  சசிகலா. சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து அதிமுக கொடியுடன் காரில் புறப்பட்டார் சசிகலா. வீட்டில் இருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு தொண்டர்கள் ஆரத்தி எடுத்து பூசனிக்காய் உடைத்து வரவேற்றனர். Sasikala shed tears at the memory of J. ... vow again ..!

சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஏறத்தாழ 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குப் பின்னர் இன்று சசிகலா செல்கிறார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் நேரிலும் போனிலும் பேசி வந்தார். இதனால் அவர் தீவிர அரசியலில் ஈடுபடபோகிறார் என்ற கணிப்புகள் வெளிவந்தன.

ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அவர் அமமுக சார்பாக பரப்புரை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில், ஏறத்தாழ 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் சசிகலா. அவருடைய வருகையை முன்னிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்படடுள்ளது.

Sasikala shed tears at the memory of J. ... vow again ..!

நீண்ட இடைவெளிக்குப் பின் நினைவிடம் வரும் சசிகலாவை வரவேற்க ஆதரவாளர்கள் மெரினாவில் குவிந்துள்ளனர். இன்று காலை 10.30 மணிக்கு தி.நகர் இல்லத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் நினைவிடம் நோக்கி புறப்படும் சசிகலா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.

நினைவிடத்தில் கூடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சசிகலா மீண்டும் சபதம் செய்தார். சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்வதற்கு முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் சபதம் செய்திருந்தார். இப்பொழுது இரண்டாவது முறையாக சபதம் செய்கிறார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios