அனைத்து மொழிகளுக்கும் தாய்... சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்க வேண்டும்... அடம்பிடிக்கும் சு.சுவாமி..!
குழந்தைகளின் மன வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவதை அரசு ஊக்குவிக்க வேண்டும்
சமஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் தாய், அதை நாட்டின் அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் 'பண்டைய மற்றும் செழித்து வரும் இந்து நாகரிகம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றிய அவர், குழந்தைகளின் மன வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
அத்மார் மடத்தின் 'பர்யாய' காலத்தின் முடிவைக் குறிக்கும் 'விஸ்வர்பணம்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஸ்ரீ கிருஷ்ண மடத்தின் ராஜாங்கனையில் இந்த விரிவுரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தி, உருது, மராத்தி மற்றும் நேபாளி மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானதால், தேவநாகரி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன என்றார். யோகா தொடர்பான அனைத்து இலக்கியங்களும் சமஸ்கிருதத்தில் உள்ளன.
சமஸ்கிருத மொழியின் வளர்ச்சி இந்துக்களை ஒன்றிணைக்கவும், அவர்களில் ஒற்றுமை உணர்வை உருவாக்கவும் உதவும் என்றார் சுவாமி.
நிகழ்ச்சிக்கு ஆத்மர் மடத்தின் இளநிலை சீர் சுவாமி ஈஷபிராய தீர்த்தா தலைமை வகித்தார். எடனீர் மடத்தின் தலைவர் சுவாமி சச்சிதானந்த பாரதி தீர்த்தா கலந்து கொண்டு பேசினார்.