இதுவரை 8 எம்பிக்கள் ஒபிஎஸ்சுடன் ஐக்கியமாகி உள்ளதால் சசிகலா தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தவிர ஈரோடு முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் அமைச்சரும் தற்போதைய மீனவர் பிரிவு துணை செயலாளருமான கே.ஏ.ஜெயபால், பிரபல நடிகரான ராமராஜன் ,நடிகர் தியாகு ஆகியோரும் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பதால் சசிகலா கூடாரமே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் பிரபலங்களும் அடுத்தடுத்து ஓபிஎஸ் வீடு நோக்கி படையெடுப்பதால் ஓபிஎஸ் வீட்டு மேடையில் நிற்க கூட இடமில்லாமல் போயுள்ளது.

சோளிங்கரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வில்வனாதனும் ஓபிஎஸ்சுடன் இணைந்துள்ளார்.

இவர்களோடு தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன், நடிகர் அருண்பாண்டியனும் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.