விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா பாதிப்பு... அதிர்ச்சியில் தொண்டர்கள்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 22ம் திடீரென நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, அவர்கள் வீடு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தது.
கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதால் விஜயகாந்த் இன்று மாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என சுதீஷ் தகவல் தெரிவித்திருந்தார். இது தேமுதிக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துடன், பிரேமலதா உடன் இருந்து கவனித்து வந்தார்.
இந்நிலையில், குடும்பத்தில் உள்ளவர்கள் மீண்டும் பரிசோதனை செய்தனர். அப்போது, விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உடனடியாக மியாட் மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.