Asianet News TamilAsianet News Tamil

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா.. தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்..!

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

Prakash Javadekar tests positive
Author
Delhi, First Published Apr 16, 2021, 7:03 PM IST

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் தொற்று மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 

Prakash Javadekar tests positive

இந்நிலையில், சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திக் விஜய் சிங், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

Prakash Javadekar tests positive

இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 3 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios