"கட்சி தொண்டர்கள் சசிகலாவை சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது" - பொன்னையன் பரபரப்பு கேள்வி
சசிகலாவை அமைச்சர்கள் சந்திப்பதில் என்ன தவறு என அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராயபேட்டை அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன் மறைந்த ஜெயலலிதாவுடன் இறுதி வரை வாழ்ந்தவர் சசிகலா என தெரிவித்தார்.
சசிகலா குறித்து வெளிவரும் தகவல்கள் பொய்யானவை என்றும் தெரிவித்த பொன்னையன் சசிகலாவை அமைச்சர்களும் நிர்வாகிகளும் சந்திப்பதில் என தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.
அதிமுகவின் புதிய பொது செயலாளர் விரைவில் தேர்ந்தெடுக்கபடுவார் என்றும் பொன்னையன் தெரிவித்தார்.