Asianet News TamilAsianet News Tamil

“மக்கள் ஆதரவில்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம்...?” - பொன்னாரின் வினோத விளக்கம்

ponnar tweet about hydro carbon project
ponnar tweet-about-hydro-carbon-project
Author
First Published Mar 27, 2017, 10:25 AM IST


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பெட்ரோலிய துறை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், இன்று கையெழுத்தாகிறது. இதனால், பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான ஒப்பந்தத்துக்கு கையெழுத்தாக உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களோடு மட்டுமே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. எந்த ஒரு புதிய நிறுவனமும் ஒப்பந்தம் செய்யவில்லை.

ponnar tweet-about-hydro-carbon-project

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற செய்தியால், யாரும் குழப்பமடைய வேண்டாம்.நெடுவாசல் போராட்ட குழுவினரிடம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

ponnar tweet-about-hydro-carbon-project

அதுபோல், மக்களின் ஆதரவு இல்லாமல், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios