Asianet News TamilAsianet News Tamil

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்.. அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது.. சிபிஐ அதிரடி..!

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

pollachi case...cbi arrests 3 more including aiadmk workers
Author
Coimbatore, First Published Jan 6, 2021, 11:00 AM IST

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் இளம்பெண்களை அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

pollachi case...cbi arrests 3 more including aiadmk workers

இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்ததால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ வசம் சென்றது. இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, அருளானந்தம், ஹேரேன்பால், பாபு ஆகிய 3 பேரை பொள்ளாச்சியில் நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

pollachi case...cbi arrests 3 more including aiadmk workers

கைது செய்யப்ட்ட பொள்ளாச்சியை சேர்ந்த 3 பேரையும், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் அருளானந்தம் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ஏற்கனவே வசந்த்குமார், சபரி ராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios