Asianet News TamilAsianet News Tamil

தென் தமிழக மக்களே உஷார்.. அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை.. 55 கிலே மீட்டர் வேகத்தில் கடல் காற்று..

மேலும், அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வடதமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

People of South Tamil Nadu are alert .. Moderate rain for the next three days .. Sea breeze at 55 kmph ..
Author
Chennai, First Published Dec 21, 2020, 1:22 PM IST

தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையுமே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

People of South Tamil Nadu are alert .. Moderate rain for the next three days .. Sea breeze at 55 kmph ..

மேலும், அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வடதமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும் என தெரிவித்துள்ளது. 

People of South Tamil Nadu are alert .. Moderate rain for the next three days .. Sea breeze at 55 kmph ..

டிசம்பர் 21 ஆம் தேதி தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும், டிசம்பர் 22 ஆம் தேதி, குமரி கடல் மன்னார் வளைகுடா மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios