Asianet News TamilAsianet News Tamil

இந்துக்களை அடிமைகளாக வைத்துள்ளனர் இஸ்லாமியர்கள்…. எச்.ராஜா சர்ச்சைப் பேச்சு !! ஊரே ஒன்று திரண்டு போலீசில் புகார் !!

இஸ்லாமியர்களை  தீவிரவாதிகள் என்றும் அவர்கள் இந்துக்களை அடிமைகளாக வைத்துள்ளனர் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசிய பேச்சுக்கு மேல்விஷாரம் பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

people complaint against raja
Author
Vellore, First Published May 18, 2019, 9:23 AM IST

நடிகர் கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த பேச்சு குறித்து தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்துக்கள் ஒடுக்கப்பட்டு கொத்தடிமைகளாக இருப்பதாகவும், குறிப்பாக வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் இஸ்லாமியர்களின் ஆதிக்கத்தால் அங்குள்ள இந்துக்கள் தனி பஞ்சாயத்து கேட்டு போராடுவதாகவும் தெரிவித்தார்.

people complaint against raja
எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து  இசுலாமியர்களை தீவிரவாதிகள் என்று கூறி விமர்சனம் செய்த, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்று திரண்டுஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

people complaint against raja
புகாரை பெற்ற ஆற்காடு நகர போலீசார் அதன் மீது சி.எஸ்.ஆர் அடிப்படையில், புகாரை பதிவு செய்து அதன் நகலை பொதுமக்களிடம் அளித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios