Asianet News TamilAsianet News Tamil

மக்களே உஷார்... அடுத்த 4 நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதிகளில் மழை.. வானிலை ஆய்வுமையம் தகவல்.

குமரிக்கடல் பகுதியில்  ஒரு கிலோமீட்டர் உயரத்தில்  நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக 09.03.2021 இன்று தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய  இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   

People Alart ... Rain in the coastal areas of South Tamil Nadu for the next 4 days .. Weather Research Center
Author
Chennai, First Published Mar 9, 2021, 2:27 PM IST

குமரிக்கடல் பகுதியில்  ஒரு கிலோமீட்டர் உயரத்தில்  நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக 09.03.2021 இன்று தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய  இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

மேலும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும் என்றும், 10.03.2021 முதல் 13.03.2021 வரை: தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. 

People Alart ... Rain in the coastal areas of South Tamil Nadu for the next 4 days .. Weather Research Center

ஏனைய மாவட்டங்கள் மற்றும்  புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் அதன்பிறகு தெளிவாகவும் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

People Alart ... Rain in the coastal areas of South Tamil Nadu for the next 4 days .. Weather Research Center

கடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு , பாபநாசம்  தலா  2 சென்டிமீட்டர் மழையும், கன்யாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, திருப்பதிசாரம், கன்யாகுமரி, நாகர்கோயில்  தலா 2 சென்டிமீட்டர் மழையும் , சித்தார்  1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios